![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/88/Chandrayaan-3_Integrated_Module_in_clean-room_before_encapsulation_01.webp/640px-Chandrayaan-3_Integrated_Module_in_clean-room_before_encapsulation_01.webp.png&w=640&q=50)
சந்திரயான்-3
இந்தியாவின் மூன்றாவது சந்திர ஆய்வுப் பணி / From Wikipedia, the free encyclopedia
சந்திரயான்-3 (Chandrayaan-3) என்பது இந்திய நிலாப்பயண சந்திரயான் திட்டத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இசுரோ) திட்டமிட்டுள்ள மூன்றாவது மிக அண்மைய நிலாத் தேட்டத் திட்டமாகும்.[7] 2023 சூலையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2019 இல் சந்திரயான்-2 இல் ஏவப்பட்டதைப் போன்று, விக்ரம் என்ற நிலாத் தரையிறங்கியையும், பிரக்யான் என்ற நிலாத் தரையூர்தியையும் கொண்டுள்ளது.
![]() சந்திரயான்-3 ஒருங்கிணைந்த தொகுதியை இணைக்கும் முன் சுத்தமான அறையில் | |||||
திட்ட வகை |
| ||||
---|---|---|---|---|---|
இயக்குபவர் | இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இசுரோ) | ||||
இணையதளம் | www | ||||
திட்டக் காலம் | 10 மாதம்-கள் and 16 நாள்-கள் (கழிந்தது)
| ||||
விண்கலத்தின் பண்புகள் | |||||
செயற்கைக்கோள் பேருந்து | சந்திரயான் | ||||
தயாரிப்பு | இசுரோ | ||||
ஏவல் திணிவு | 3,900 கிகி[1] | ||||
ஏற்புச்சுமை-நிறை | செலுத்துகைப் பெட்டகம்: 2,148 கிகி தரையிறங்கி (விக்ரம்): 1,726 கிகி தரையூர்தி (பிரகியான்) 26 கிகி மொத்தம்: 3900 kg | ||||
திறன் | செலுத்துகைப் பெட்டகம்: 758 W தரையிறங்கி: 738 W தரையூர்தி: 50 W | ||||
திட்ட ஆரம்பம் | |||||
ஏவப்பட்ட நாள் | 14 சூலை 2023, 14:35:17 இசீநே, (9:05:17 ஒசநே)[2][3] | ||||
ஏவுகலன் | ஜி. எஸ். எல். வி மார்க் III எம்4 | ||||
ஏவலிடம் | சதீஸ் தவான் விண்வெளி மையம் | ||||
ஒப்பந்தக்காரர் | இசுரோ | ||||
நிலா சுற்றுக்கலன் | |||||
சுற்றுப்பாதையில் இணைதல் | 5 ஆகத்து 2023 | ||||
நிலா தரையிறங்கி | |||||
விண்கலப் பகுதி | விக்ரம் தரையிறங்கி | ||||
தரையிறங்கிய நாள் | 23 ஆகத்து 2023, 18:02 IST, (12:32 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்)[4] | ||||
தரையிறங்கிய பகுதி | 69.367621°S 32.348126°E / -69.367621; 32.348126[5]
(மான்சினசு, சிம்பேலியசு குழிகளுக்கிடையில்)[6] | ||||
நிலா தேட்ட ஊர்தி | |||||
விண்கலப் பகுதி | பிரகியான் தரையூர்தி | ||||
தரையிறங்கிய நாள் | TBD | ||||
![]()
|
சந்திரயான்-3 சதீசு தவான் விண்வெளி மையத்தில் இருந்து 2023 சூலை 14 அன்று ஏவப்பட்டது. விண்கலம் 2023 ஆகத்து 5 அன்று நிலாவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. விக்ரம் தரையிறங்கி பிரக்யான் தரையூர்தியுடன் நிலாவின் தென்முனைப் பகுதியில்[8] ஆகத்து 23 அன்று 12:33 ஒசநே நேரத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கி, தென்முனையில் தரையிறங்கிய முதலாவது நாடாகவும், அத்துடன் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நான்காவது நாடாகவும் இந்தியாவை உருவாக்கியது.[9][10][11]தரையிறங்கி 2023, செப்டம்பர் 3 அன்று இறங்கிய இடத்தில் இருந்து துள்ளிக் குதித்து 30–40 cm (12–16 அங்) அளவு தள்ளிய இருப்பை அடைந்தது its landing site.[12]
விக்ரம் தரையிறங்கியும் பிரக்யான் தரையூர்தியும் செப்டம்பர் முறையே செப்டம்பர் 2 அன்றும் 4 அன்றும் இறங்கிய இடத்தில் உள்ள சூரிய ஆற்றல் அருகி வந்ததால் உறங்க வைக்கப்பட்டன. தரையிறங்கியும் தரையூர்தியும் செப்டம்பர் 22 அண்று சூரிய எழுச்சியின்போது மீண்டும் வேலை செய்ய திட்டமிடப்பட்டது.unrise on 22 September.[13][14] என்றாலும், செப்டம்பர் 22 அன்று விக்ரம் தரையிறங்கியும் பிரக்யான் தரையூர்தியும் விழிப்பு அழைப்புக்குத் துலங்காமல் தவறவிட்டன.[15][16]