பிரக்யான் தரையூர்தி
From Wikipedia, the free encyclopedia
பிரக்யான் தரையூர்தி (Pragyan rover) என்பது சந்திரயான- 2 இன் தரையூர்தி ஆகும். இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இசுரோ) உருவாக்கிய சந்திரயான-2 சந்திரயான்-3 ஆகிய இரண்டு நிலாப் பயணங்களுக்குமானது ஆகும்.[1][2] 2019 செப்டம்பர் 6 ஆம் தேதி சந்திரனில் தரையிறங்கியபோது பிரக்யான் அதன் தரையிறங்கி விக்ரமுடன் சேர்ந்து தரையில் மோதியதால் அழிந்தது , மேலும் அதை அனுப்ப ஒருபோதும் பிறகு வாய்ப்பு கிடைக்கவில்லை.[3] இப்போது சந்திரயான்-3 ஏவுதல் ஜூலை 14,2023 அன்று பிற்பகல் 2:35 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2023 ஆகத்து 23 அன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டது.[4]