![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/07/Karpal_Singh_in_Kuching%252C_2011.jpg/640px-Karpal_Singh_in_Kuching%252C_2011.jpg&w=640&q=50)
கர்பால் சிங்
From Wikipedia, the free encyclopedia
கர்பால் சிங் (பஞ்சாபி மொழி: ਕਰਪਾਲ ਸਿੰਘ; சூன் 28, 1940 - ஏப்ரல் 17, 2014) என்பவர் மலேசியாவில் ஒரு மூத்த அரசியல்வாதி; ஒரு பிரபலமான வழக்குரைஞர்.[1][2] 1978 இல் இருந்து 1999 வரை ஜோர்ஜ் டவுன், பினாங்கு ஜெலுத்தோங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2004 ஆம் ஆண்டில் இருந்து, புக்கிட் குளுகோர் ஜோர்ஜ் டவுன், பினாங்கு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராகவும், 29 ஆண்டுகளாகச் சேவையாற்றி வந்தார். இவர் ஜனநாயக செயல் கட்சியின் முன்னாள் தேசியத்தலைவர் அவார். கர்பால் சிங் 17 ஏப்ரல் 2014 அதிகாலையில் நடந்த ஒரு கோர சாலை விபத்தில் கொல்லப்பட்டார்.[3]
கர்பால் சிங் | |
---|---|
![]() | |
பிறப்பு | கர்பால் சிங் Karpal Singh (1940-06-28)28 சூன் 1940 ஜோர்ஜ் டவுன், நீரிணைக் குடியேற்றம் |
இறப்பு | 17 ஏப்ரல் 2014(2014-04-17) (அகவை 73) வடக்கு தெற்கு நெஞ்சாலை(வடக்கு பாதை), 301.6 கிமீ, பேராக் |
இறப்பிற்கான காரணம் | சாலை விபத்து |
மற்ற பெயர்கள் | ஜெலுத்தோங் புலி |
இனம் | மலேசிய இந்தியர் |
கல்வி | செயின்ட் சேவியர் பள்ளி ஜோர்ஜ் டவுன், பினாங்கு |
படித்த கல்வி நிறுவனங்கள் | சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் |
அறியப்படுவது | முன்னாள் தேசியத்தலைவர் ஜனநாயக செயல் கட்சி முன்னாள் ![]() முன்னாள் வழக்குரைஞர் |
அரசியல் இயக்கம் | ஜனநாயக செயல் கட்சி |
சமயம் | சீக்கியம் |
வாழ்க்கைத் துணை | குர்மிட் கோர் |
பிள்ளைகள் | ஜக்டீப் சிங் டியோ கோவிந்த் சிங் தியோ ராம் கர்பால் சங்கீத் கோர் மான் கர்பால் |
மலேசிய நாடாளுமன்றத்திலும், மலேசிய நீதிமன்றங்களிலும் வாதத்துக்கிடமான மனிதராகப் பெயர் பெற்ற இவர், பலமுறை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளார்.[4][5][6] அரசாங்க விரோதக் கருத்துகள் எனக் கருதப்படும் காரணங்களுக்காக, இவர் 1987 ஆம் ஆண்டு, மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கமுந்திங் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.[7] மலேசியாவில் இவருக்கு ஜெலுத்தோங் புலி எனும் அடைமொழிப் பெயரும் உண்டு.[1]
மலேசியாவில் பல பிரபலமான உயர்மட்ட அரசியல், போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் வாதாடியுள்ள இவர், அன்வர் இப்ராகிம் பாற்புணர்ச்சி வழக்கில் எதிர்த்தரப்பின் தலைமை வழக்குரைஞராகவும் பொறுப்பேற்று இருந்தார். மலேசியாவில் போதைப் பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதை இவர் எதிர்த்துப் போராடி வந்தார்.[8]