கத்தோலிக்கத் தேவாலயப் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள்
From Wikipedia, the free encyclopedia
உலக நாடுகளில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளின் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் திருச்சபை உறுப்பினர்களால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட பல வழக்குகள் உள்ளது.[3] 20 மற்றும் 21-ஆம் நூற்றாண்டுகளில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள், குற்றங்கள், விசாரணைகள், திருச்சபை நிர்வாகிகளால் குழந்தைகள் பாலியியல் துன்புறுத்தல்களை மறைக்க முயன்றனர்.[4]
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெரும்பாலான குழந்தைகளில் பெண் குழந்தைகள் அதிகமாகும். பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் வயது 11 மற்றும் 14 இடைப்பட்டவர்களே அதிகமாவர்.[5][6][7]
மத குருமார்களின் பாலியியல் குற்ற வழக்குகளில் பெரும்பாலும் பெரியவர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தலை உள்ளடக்குவதில்லை. குழந்தைகள் தொடர்பான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் மறைப்புகள் பற்றிய குற்றச்சாட்டுகள் 1980-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பொதுமக்களின் கவனத்தைப் பெறத் தொடங்கியது.
கனடா, அயர்லாந்து, சிலி, ஆஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கத்தோலிக்க திருச்சபைகளில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் 1990-களில் அதிகம் பதிவானது.[8][9][10]
ஐக்கிய அமெரிக்காவில் 2002-ஆம் ஆண்டில், தி பாஸ்டன் குளோப் செய்தி இதழின் விசாரணை மூலம் வெளிவந்த, குழந்தைகள் பாலியியல் துன்புறுத்தல்கள் குறித்தான செய்திகள் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்து. ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சிலி மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் பரவலான திருச்சபைகளில் நடைபெறும் குழந்தைகள் பாலியியல் துன்புறுத்தல்களை மறைக்கும் வகையில் கத்தோலிக்க திருச்சபைகள் செயலாற்றியது.[note 1]
கத்தோலிக்க ஆட்சிப் பீடம் 2001-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரையில் 3,000 கத்தோலிக்க மத குருமார்கள் நடத்திய சிறார்கள் மீதான பாலியியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை செய்தது.[11] ரோமன் கத்தோலிக்க தேவாலயம் பற்றி அறிவுள்ள மறைமாவட்ட அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் மதகுருமார்களின் பாலியல் துஷ்பிரயோகம் குறித்து பொதுவாக விவாதிக்கப்படுவதில்லை. எனவே அளவிடுவது கடினம்.[12]
கத்தோலிக்க மதகுருமார்களின் குழந்தைகள் மீதான பாலியியல் துன்புறுத்தல்களை, ஊடகங்கள் அதிகப்படியாக ஊதி பெரிதாக்குகிறது என்றும், இதே போன்ற துன்புறுத்தல்கள் வேறு சமயகளில் நடைபெறுகின்றது என்றும், இப்பிரச்சினைகள் தேவாலயத்திற்குள் தீர்க்க்கப்படும் என திருச்சபை உறுப்பினர்கள் வாதிடுகின்றனர்.[13]2001-ஆம் ஆண்டில் தேவாலயத்திற்குள் நடைபெறும் பாலியியல் துன்புறுத்தல்கள் குறித்து போப் ஜான் பால் வெளிப்படையாக மன்னிப்புக் கோரினார்.[14]