ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம்
From Wikipedia, the free encyclopedia
ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1MDB) என்பது மேம்பாட்டு வியூகம் வகுக்கும் நிறுவனமும், மலேசிய அரசு அமைப்புமாகும்.[1] நாட்டின் நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கான வியூகத்தை உருவாக்குவதற்காகவும், உலகளாவிய பங்குதாரர்களை பெறவும், அன்னிய நேரடி முதலீட்டைநாட்டிற்கு கொண்டுவருவதும் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.[2] இந்நிறுவனம் தற்போது நாட்டின் முக்கிய திட்டங்களான துன் ரசாக் எக்சேஞ்ச் மற்றும் அதன் துணை நிறுவனமான பந்தார் மலேசிய மற்றும் மூன்று மின் உற்பத்தி நிறுவனங்களை வாங்கியுள்ளது.
![]() | |
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2008 |
தலைமையகம் | கோலாலம்பூர், மலேசியா |
முதன்மை நபர்கள் | நஜீப் ரசாக் |
தொழில்துறை | முதலீட்டு வியூகம். |
வருமானம் | வெளியிடப்படவில்லை |
உரிமையாளர்கள் | மலேசிய அரசு |
இணையத்தளம் | http://www.1mdb.com.my/ |
2015ல், இந்நிறுவனம் தொடர்பான செய்திகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பத்திரிக்கைகளில் வெளிவரத்துவங்கின. குறிப்பாக அமெரிக்க வால் ஸ்டிரீட் பத்திரிக்கையில் பிரதமர் நஜீப் ரசாகின் சொந்த வங்கி கணக்கிலும் அவரது நெருங்கியவர்களின் கணக்குகளில் இந்நிறுவனத்தின் பணம் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.