இலங்கை சட்டவாக்கப் பேரவை
From Wikipedia, the free encyclopedia
இலங்கை சட்டவாக்கப் பேரவை அல்லது இலங்கை சட்டசபை (Legislative Council of Ceylon) என்பது பிரித்தானிய இலங்கையின் சட்டவாக்க சபையாகும். இது 1833 ஆம் ஆண்டில் கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் சேர் ரொபர்ட் ஹோட்டன் என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனுடன் இணைந்து இலங்கை நிறைவேற்றுப் பேரவையும் நிறுவப்பட்டது. இந்த சட்டவாக்கப் பேரவையே இலங்கையின் முதலாவது பிரதிநிதித்துவ முறையிலான அரசு ஆகும். இந்த சட்டசபை 1931 டொனமூர் அரசியலமைப்பின் மூலம் இலங்கை அரசாங்க சபையாக மாற்றப்பட்டது.
விரைவான உண்மைகள் Legislative Council of Ceylon இலங்கை சட்டவாக்கப் பேரவை, வகை ...
Legislative Council of Ceylon இலங்கை சட்டவாக்கப் பேரவை | |
---|---|
வகை | |
வகை | ஒருமன்ற முறைமை |
காலக்கோடு | |
குடியேற்றநாடு | பிரித்தானிய இலங்கை |
தோற்றம் | மார்ச் 13, 1833 |
முன்னிருந்த அமைப்பு | எதுவுமில்லை |
பின்வந்த அமைப்பு | இலங்கை அரசாங்க சபை |
கலைப்பு | 1931 |
தலைமையும் அமைப்பும் | |
உறுப்பினர்கள் | 16 (1833-1889) 18 (1889-1910) 21 (1910-1920) 37 (1920-1923) 49 (1923-1931) |
தேர்தல் | |
இறுதித் தேர்தல் | இலங்கை சட்டசபைத் தேர்தல், 1924 |
தலைமையகம் | |
கொழும்பு கோட்டையில் உள்ள சட்டசபை. இக்கட்டடம் 1947 முதல் 1971 வரை செனட் சபையால் பயன்படுத்தப்பட்டது. இன்று இது குடியரசுக் கட்டடம் என ழைக்கப்படுகிறது. இங்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் அமைந்துள்ளது.. |
மூடு