டொனமூர் அரசியலமைப்பு
From Wikipedia, the free encyclopedia
டொனமூர் அரசியலமைப்பு (டொனமூர் அரசியல் யாப்பு, Donoughmore Constitution) என்பது பிரித்தானிய இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு ஆகும். 1924 முதல் அமுலில் இருந்த மனிங்-டெவொன்சயர் அரசியல் சீர்திருத்தம் டொனமூர் ஆணைக்குழு மூலம் திருத்தியமைக்கப்பட்டு புதிய அரசியலமைப்புக்கு டொனமூர் அரசியலமைப்பு எனப் பெயரிடப்பட்டது. இது 1931 முதல் 1947 ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. நவீன இலங்கையின் வரலாற்றில் ஐந்தாவது அரசியல் திட்டமாக இது கொள்ளப்படுகின்றது. இது ஆளுநர் கர்பட் ஸ்டான்லி அவர்களின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. டொனமூர் ஆணைக்குழுவில் சேர். மேதிவ் நேதன், சேர் ஜெப்ரி பட்லர் மற்றும் பேராசிரியர் டிரமன்ட் ஷீல்ஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த அரசியலமைப்பு 1947 இல் சோல்பரி அரசியலமைப்பாக மாற்றப்பட்டது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |