இலங்கை மூதவை
From Wikipedia, the free encyclopedia
இலங்கை மூதவை அல்லது இலங்கை செனட்சபை (Senate of Ceylon) என்பது இலங்கை நாடாளுமன்றத்தின் மேலவை ஆகும். இந்த அவை சோல்பரி ஆணைக்குழு மூலம் 1947 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. செனட் சபைக்கான பிரதிநிதிகள் நேரடியாகத் தேர்தல் மூலம் அல்லாமல் நியமன உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கொழும்பு கோட்டையில் உள்ள பழைய சட்டசபைக் கட்டடம் செனட் சபையால் பயன்படுத்தப்பட்டது. இது முதல் தடவையாக 1947, நவம்பர் 12 இல் கூடியது. சோல்பரி அரசியலமைப்பில் எட்டாவது திருத்தம் கொண்டு வரப்பட்டு 1971, அக்டோபர் 2 ஆம் நாள் செனட் சபை கலைக்கப்பட்டது. புதிய குடியரசு அரசியலமைப்பு 1972, மே 22 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
விரைவான உண்மைகள் Senate of Ceylon இலங்கை மூதவை, வகை ...
Senate of Ceylon இலங்கை மூதவை | |
---|---|
வகை | |
வகை | மேலவை |
காலக்கோடு | |
நாடு | இலங்கை |
தோற்றம் | 1947 |
முன்னிருந்த அமைப்பு | இலங்கை அரசாங்க சபை |
பின்வந்த அமைப்பு | எதுவும் இல்லை |
கலைப்பு | 2 அக்டோபர் 1971 |
தலைமையும் அமைப்பும் | |
உறுப்பினர்கள் | 30 |
தேர்தல் | |
தலைமையகம் | |
கொழும்பு கோட்டையில் உள்ள பழைய சட்டசபை 1947 முதல் 1971 வரை மூதவையால் பயன்படுத்தப்பட்டது. இன்று இது குடியரசுக் கட்டடம் என அழைக்கப்படுகிறது. இங்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் அமைந்துள்ளது. |
மூடு