இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015
From Wikipedia, the free encyclopedia
2015 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் (Sri Lankan Presidential elections) இலங்கையின் ஏழாவது சனாதிபதியைத் தேர்ந்தெடுக்க 2015 சனவரி 8 ஆம் நாளன்று நடைபெற்றது. முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சிக் காலம் 2016 ஆம் ஆண்டில் நிறைவடைவதற்கு முன்னதாகவே புதிய தேர்தலுக்கான அறிவிப்பு 2014 நவம்பர் 21 ம் நாள் அறிவிக்கப்பட்டது.[1][2] இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 2014 டிசம்பர் 8 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.[3] மகிந்த ராசபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வேட்பாளராக மூன்றாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிடவிருப்பதாக அறிவித்தார்.[4][5] அதேவேளையில் ராசபக்சவை எதிர்த்துப் போட்டியிட எதிர்க்கட்சியினர் ராசபக்சவின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து, ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறிய மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக அறிவித்தனர்.[6][7][8][9].
| ||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 81.52% | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||
தேர்தல் மாவட்டங்கள் வாரியாக வெற்றியாளர்கள். ராசபக்ச நீலம், சிறிசேன பச்சை. | ||||||||||||||||||||||||||
|
மைத்திரிபால சிறிசேன 51.28% வாக்குகள் பெற்றதை அடுத்து 2015 சனவரி 9 ஆம் நாளன்று புதிய அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டார். ராஜபக்ச 47.58% வாக்குகள் பெற்றார்.[10][11][12][13]
மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் மைத்திரிபால சிறிசேன கொழும்பு, கம்பகா, கண்டி, நுவரெலியா, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம், பதுளை, பொலன்னறுவை ஆகிய 12 மாவட்டங்களில் முதலாவதாக வந்து வெற்றி பெற்றார். ராசபக்ச களுத்துறை, மாத்தளை, காலில், மாத்தறை, அம்பாந்தோட்டை, குருணாகல், அனுராதபுரம், மொனராகலை இரத்தினபுரி, கேகாலை ஆகிய 10 மாவட்டங்களில் முதலாவதாக வந்தார்.[10]