இரண்டாம் பாஜி ராவ்
இந்திய விடுதலைப் போராட்டம் / From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் பாஜி ராவ் (Baji Rao II) (10 சனவரி 1775 – 28 சனவரி 1851), மராத்திய பேரரசின் இறுதி பேஷ்வாக 1796 முதல் 1818 முடிய ஆட்சி செலுத்தியவர். 1817–1818இல் நடந்த மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில், மராத்திய ஆட்சிப் பகுதிகளை பிரிட்டனின் கம்பெனி அட்சியிடம் இழந்தவர். [1]
விரைவான உண்மைகள் இரண்டாம் பாஜி ராவ், ஆட்சி ...
இரண்டாம் பாஜி ராவ் | |
---|---|
மராத்தியப் பேரரசின் பேஷ்வா | |
![]() இரண்டாம் பாஜி ராவ் | |
ஆட்சி | 1796 - 1798 |
முடிசூட்டு விழா | 6 டிசம்பர் 1796 |
துணைவர் | சரசுவதி பாய் |
வாரிசு(கள்) | நானா சாகிப் (தத்துப் பிள்ளை) |
அரச குலம் | பேஷ்வா வம்சம் |
தந்தை | இரகுநாத ராவ் |
தாய் | ஆனந்தி பாய் |
பிறப்பு | 10 சனவரி 1775 தார், மத்தியப்பிரதேசம் |
இறப்பு | 28 சனவரி 1851 பித்தூர் |
சமயம் | இந்து சமயம் |
மூடு
ஆட்சியை இழந்த பாஜி ராவ், உத்தரப் பிரதேசம், பித்தூரில், ஆங்கிலேயர்களால் தங்க வைக்கப்பட்டு, ஆண்டுக்கு 80,000 பிரிட்டன் பவுண்டு ஸ்டெர்லிங் ஓய்வூதியமாக பெற்றுக் கொண்டு வாழ்ந்தார். குழந்தை இல்லாத பாஜி ராவ், நானா சாகிப் என்பவரை தத்தெடுத்து வளர்த்தார். டல்ஹவுசி பிரபு கொண்டு வந்த அவகாசியிலிக் கொள்கையின்படி பிரித்தானிய கம்பெனி ஆட்சி இவருக்கு ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்திவிட்டது.