டல்ஹவுசி பிரபு
From Wikipedia, the free encyclopedia
ஜேம்ஸ் ஆண்ட்ரூ பி ரௌன்-ராம்சே என்ற இயற்பெயர் கொண்ட டல்ஹவுசி பிரபு (James Andrew Broun-Ramsay, 1st Marquess of Dalhousie: 22 ஏப்ரல் 1812–19 டிசம்பர் 1860), ராம்சே பிரபு எனவும் ஏர்ல் ஆப் டல்ஹவுசி எனவும் அழைக்கப்பட்ட ஒரு இசுக்காட்லாந்தியர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவின் காலனித்துவ நிர்வாகியாவார். டல்ஹவுசி 1848 இலிருந்து 1856 வரை இந்தியாவின் இந்தியத் தலைமை ஆளுநராகப் பணியாற்றினார். கிழக்கிந்தியக் கம்பெனியின் விதிகளுக்குப் புறம்பாக இந்தியாவில் நிர்வாகம் செய்து ஆங்கிலேய ஆட்சியை விரிவு செய்தவராவார். இவரது நிர்வாகத் திறமை, இவருக்குப் பின் இந்தியாவை ஆண்ட ஆளுநர்களுக்கு ஒரு வழிகாட்டியாய் அமைந்தது.[1]
விரைவான உண்மைகள் டல்ஹவுசி பிரபு, இந்தியத் தலைமை ஆளுநர் ...
டல்ஹவுசி பிரபு | |
---|---|
இந்தியத் தலைமை ஆளுநர் | |
பதவியில் 1848–1856 | |
ஆட்சியாளர் | விக்டோரியா மகாராணி |
முன்னையவர் | விஸ்கவுண்ட் ஹார்டிங் பிரபு |
பின்னவர் | கானிங் பிரபு |
வணிகக் குழுவின் தலைவர் | |
பதவியில் 5 பிப்ரவரி 1845 – 27 சனவரி 1846 | |
ஆட்சியாளர் | Victoria |
பிரதமர் | இராபர்ட் பீல் |
முன்னையவர் | வில்லியம் கிளாட்ஸ்டோன் |
பின்னவர் | கிளாரண்டைன் பிரபு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 April 1812 (1812-04-22) டல்ஹவுசி கோட்டை, மிட்லொதைன் |
இறப்பு | 19 December 1860 (1860-12-20) டல்ஹவுசி கோட்டை, மிட்லொதைன் |
குடியுரிமை | பிரித்தானியா மற்றும் அயர்லாந்து |
தேசியம் | ஸ்காட்லாந்து |
துணைவர் | Lady Susan Hay (d. 1853) |
முன்னாள் கல்லூரி | கிறிஸ்துவ சபை, ஆக்ஸ்போர்டு |
மூடு