இனிப்பு-விருந்துக்குப் பின்
From Wikipedia, the free encyclopedia
இனிப்பு-விருந்துக்குப் பின் அல்லது விருந்துக்குப்பின் இனிப்பு (dessert) என்பது ஓர் உணவை சாப்பிட்டு முடித்த பின் சாப்பிடப்படும் ஓர் இனிப்பு வகை ஆகும். இது வழக்கமான இனிப்பு உணவுகள் மற்றும் இனிப்பு மது அல்லது மதுபானப் பொருள் போன்ற பானமாக இருக்கலாம். உலகின் சில பகுதிகளில், மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவின் பெரும்பகுதி மற்றும் சீனாவின் பெரும்பாலான பகுதிகளில், உணவை முடிப்பதற்கு ஓர் இனிப்பு வழங்கி முடிக்கும் பாரம்பரியம் இல்லை.
வகை | இனிப்பு |
---|---|
வேறுபாடுகள் | (மாச்சில்லுகள், அணிச்சல்கள், குக்கீகள், மிட்டாய், ஜெலட்டின் இனிப்புகள், குளிர்களி, பேஸ்ட்ரி, பை, புட்டிங்) |
விருந்துக்கு பின் மாச்சில்லு, அணிச்சல், குக்கீ, மிட்டாய், ஜெலட்டின் இனிப்புகள், குளிர்களி பேஸ்ட்ரி, பை, புட்டிங் வேக வைத்த கூழ் மற்றும் இனிப்பு ரசங்கள் போன்றவை வழங்கப்படுகின்றன. ஆசிய நாடுகளில் விருந்துக்குப் பின் இனிப்பில் பெரும்பாலும் பழங்களே பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் இவை இயற்கையிலேயே இனிப்பு சுவை உடையவை. சில கலாச்சாரங்களில் விருந்துக்குப்பின் இனிப்பு உணவாக பொதுவாக மிகவும் சுவையாக இருக்கும் உமாமி தின்பண்டங்களை பயன்படுத்துகிறார்கள். தமிழர் கலாசாரத்தில் உணவு விருந்திற்கு பின்பு சர்க்கரைபொங்கல், பழங்கள், வடை, மோதகம், வெற்றிலை-பீடா, கேசரி, தேநீர் அல்லது பாயசம் போன்றவை வழங்கப்படுகின்றன.