வடை
இந்தியா உணவு வகைகளுள் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
வடை பலகார வகைகளில் ஒன்றாகும். உணவுடனும் சிற்றுண்டியாகவும் பரிமாறுவர். தமிழர்களின் பெரும்பாலான விழாக்களிலும் சடங்குகளிலும் வடை பொதுவாகப் பரிமாறப்படும். இலங்கை, தென்னிந்தியா மக்கள் பலரும் வடையை விரும்பி உண்பர். உளுந்து வடை, பருப்பு வடை என்பன பரவலான வடை வகைகள். உளுத்தம் பருப்பில் செய்யும் வடையை வடை அல்லது உளுந்து வடை என்றும் மென்மையாக இருப்பதால் மெதுவடை என்றும் அழைப்பர். கடலைப் பருப்பில் செய்வதை பருப்பு வடை அல்லது மசால் வடை என்றும் அழைப்பர். இந்து மதத்தில் இறைவழிபாட்டில் அனுமானுக்கு சூட்டப்படும் வடை மாலையானது தட்டை வடை என்று அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் மாற்றுப் பெயர்கள், தொடங்கிய இடம் ...
உளுந்து வடை | |
மாற்றுப் பெயர்கள் | வடா |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | ஆந்திர பிரதேசம், கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, இலங்கை |
ஆக்கியோன் | தென்னிந்தியா |
முக்கிய சேர்பொருட்கள் | பருப்பு,உளுந்து,உருளைக்கிழங்கு, வெங்காயம் |
பிற தகவல்கள் | merits and demerits |
மூடு