இந்திய இரயில்வே
இந்திய பொதுத்துறை நிறுவனம் / From Wikipedia, the free encyclopedia
இந்திய இரயில்வே (Indian Railways) இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர்; ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்கானது இடம் பெயர்க்கப்படுகிறது; 12.54 இலட்சம் பணியாளர்கள் இதில் பணிபுரிகின்றனர். இந்தியாவிலுள்ள இருப்புப் பாதையின் மொத்த நீளம் 67,956 கிலோமீட்டர்களாகும். இது தினமும் 14,444 தொடருந்துகளை இயக்குகிறது.
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
இரயில் பவன், புது தில்லி | |
வகை | இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் |
---|---|
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | தொடர்வண்டிப் போக்குவரத்து |
சேவைகள் | பயணிகள் தொடருந்துகள் சரக்கு சேவைகள் பேருந்து போக்குவரத்து பயண முகமை சேவைகள் ஏனைய தொடர்புடைய சேவைகள் |
வருமானம் | ₹1.97214 டிரில்லியன் (US$25 பில்லியன்)[1] |
உரிமையாளர்கள் | இந்திய அரசு (100%) |
பணியாளர் | 1.254 மில்லியன்[2] |
தாய் நிறுவனம் | இந்திய இரயில்வே அமைச்சகம் |
பிரிவுகள் | 18 இரயில்வே மண்டலங்கள் |
இணையத்தளம் | www indianrailways |
இந்திய இரயில்வே வலையமைப்பு வரைபடம் | |
கண்ணோட்டம் | |
---|---|
அறிக்கை குறி | IR |
வட்டாரம் | இந்தியா |
செயல்பாட்டின் தேதிகள் | மே 8, 1845 (1845-05-08)–தற்போது வரை |
தொழில்நுட்பம் | |
தட அளவி | 1,676 மிமீ (5 அடி 6 அங்) 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்) 762 மிமீ (2 அடி 6 அங்) 610 மிமீ (2 அடி) |
மின்மயமாக்கல் | 52,247 கிலோமீட்டர்கள் (32,465 mi)(ஏப்ரல் 2022 நிலவரப்படி.)[3] |
நீளம் | 67,368 கிலோமீட்டர்கள் (41,861 mi) (பாதை)[4] 93,902 கிலோமீட்டர்கள் (58,348 mi) (ஓடுதளம்)[4] 121,407 கிலோமீட்டர்கள் (75,439 mi) (மொத்த பாதை)[5] |
தொடர்வண்டி, 1853-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1947-ல் இந்தியச் சுதந்திரத்தின் போது மொத்தம் 42 தொடர்வண்டி அமைப்புகள் இருந்தன. 1951-ல் அவை தேசியமயமாக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டபோது, உலகின் மிகப்பெரிய வலையமைப்புகளில் ஒன்றாக உருவானது. இந்திய இரயில்வேயால் தொலைதூர இரயில்கள், புறநகர் இரயில்கள் ஆகிய இரண்டுமே இயக்கப்படுகின்றன.
அஸ்வினி வைஷ்னவ் தற்போதைய இரயில்வே அமைச்சராக இருந்து வருகிறார். இந்திய இரயில்வேயின் தலைமையகம் தில்லியில் அமைந்துள்ளது.