ஆஸ்கர் இசுட்டான்லி தாவ்சன்
இந்தியக் கப்பல்படை அதிகாரி / From Wikipedia, the free encyclopedia
அட்மிரல் ஆஸ்கர் இசுட்டான்லி தாவ்சன் (Oscar Stanley Dawson) (13 நவம்பர் 1923 - 23 அக்டோபர் 2011) இந்திய கடற்படையில் நான்கு நட்சத்திரத் தகுதி பெற்ற அதிகாரியாவார். 1982 மார்ச் 1 முதல் 1984 நவம்பர் 30 வரை கடற்படைப் பணியாளர்களின் 11 வது தலைவராக பணியாற்றினார்.[1] 1983 முதல் ஓய்வு பெறும் வரை, இவர் இந்தியப் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதிகளின் தலைவராகவும் பணியாற்றினார். இவர் முன்னர் தெற்கு கடற்படை கட்டளையின் கொடி அலுவலகலின் கட்டளை-தலைமை அதிகாரியாகவும், (FOC-in-C) கிழக்கு கடற்படை (FOCEF) கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார். 1971ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின்போது இவர் கடற்படை நடவடிக்கைகளின் இயக்குநராகவும் இருந்தார்.
அட்மிரல் ஆஸ்கர் இசுட்டான்லி தாவ்சன் | |
---|---|
பிறப்பு | (1923-11-13)13 நவம்பர் 1923 பர்மாவில் பிரித்தானிய ஆட்சி, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்போதைய மியான்மர்) |
இறப்பு | 23 அக்டோபர் 2011(2011-10-23) (அகவை 87) பெங்களூர், இந்தியா |
அடக்கம் | |
சார்பு | இந்தியா (1943-1947) இந்தியா (1947 முதல்) |
சேவை/ | இந்தியக் கடற்படை |
சேவைக்காலம் | 1943–1984 |
தரம் | அட்மிரல் |
கட்டளை | இந்தியப் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதிகளின் தலைவர் தெற்கு கடற்படை கட்டளையின் கொடி அலுவலகலின் கட்டளை-தலைமை அதிகாரி கிழக்கு கடற்படை (FOCEF) கட்டளை அதிகாரி நீலகிரி கப்பலின் தலைவர் தல்வார் கப்பலின் தலைவர் |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப் போர் கோவா படையெடுப்பு இந்தியா-பாகிஸ்தான் போர், 1965 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் |
விருதுகள் | அதி விசிட்ட சேவா பதக்கம் பரம் விசிட்ட சேவா பதக்கம் |
கல்வி | ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரி |
வேறு செயற்பாடுகள் | இந்தியாவுக்கான நியூசிலாந்தின் உயர் நிர்வாக அதிகாரி அங்க காருண்ய கேந்திராவின் தலைவர் |
ஓய்வுக்குப் பிறகு, நியூசிலாந்தின் இந்திய உயர் ஆணையர் பணியகத்தில் உயர் நிர்வாகியாகப் பணியாற்றினார். இவர் பல சுற்றுச்சூழல் காரணங்களுக்காக பிரச்சாரம் செய்தார். மேலும், மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வு குறித்தும் பணியாற்றினார். அக்டோபர் 2011இல் பெங்களூரு இராணுவ மருத்துவமனையில் பெருமூளை இரத்தப்போக்கு காரணமாக இறந்தார்.