அவுரங்காபாத், மகாராட்டிரம்
From Wikipedia, the free encyclopedia
அவுரங்காபாத் ( ஒலிப்புⓘ என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஒரு மாநகரம் ஆகும். இது அவுரங்காபாத் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் மற்றும் மராத்வாடா பகுதியில் உள்ள மிகப்பெரிய நகரமாகும். தென் மண்டல வரிப்பாறைகளின் மலைப்பாங்கான மேட்டு நிலப்பரப்பில் அமைந்துள்ள அவுரங்காபாத்தானது 1,175,116 மக்கள்தொகை கொண்டு மகாராட்டிரத்தின் ஐந்தாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகர்ப்புறமாகும். இந்த நகரம் பருத்தி நெசவு மற்றும் கலை பட்டு (ஆர்டிக் சிலக்) துணிகளின் முக்கிய உற்பத்தி மையமாக அறியப்படுகிறது. இந்த நகரத்தில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகம் உட்பட பல முக்கிய கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்த நகரம் ஒரு பிரபல சுற்றுலா மையமாகவும் உள்ளது. இதன் புறநகரில் அஜந்தா, எல்லோரா குகைகள் போன்ற சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. இவை இரண்டும் 1983 ஆண்டு முதல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவுரங்காபாத் குகைகள், தௌலதாபாத் கோட்டை, கிரிஸ்னேஷ்வரர் கோயில், ஜமா மசூதி, பீபி கா மக்பாரா, ஹிமாயத் பாக், பஞ்சக்கி, சலீம் அலி ஏரி ஆகியவை பிற குறிப்பிடத்தக்க சுற்றுலா பகுதிகளாகும். வரலாற்று ரீதியாக, அவுரங்காபாத்தில் 52 வாயில்கள் இருந்தன, அவற்றில் சில இன்றும் உள்ளன. இதன் காரணமாக அவுரங்காபாத் "வாயில்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில், அவுரங்காபாத் தொழில் நகரம் (AURIC) நாட்டின் முதன்மையான சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் பசுமை தொழில்துறை சீர்மிகு நகரமாக மாறியது. [7]
அவுரங்காபாத் | |
---|---|
பெருநகர் | |
அடைபெயர்(கள்): வாயில்களின் நகரம் | |
ஆள்கூறுகள்: 19.88°N 75.32°E / 19.88; 75.32 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
பிராந்தியம் | ஔரங்காபாத் மண்டலம் |
கோட்டம் | அவுரங்காபாத் |
மாவட்டம் | அவுரங்காபாத் |
உருவாக்கம் | 1610 |
தோற்றுவித்தவர் | மாலிக் ஆம்பர் |
பெயர்ச்சூட்டு |
|
அரசு | |
• அவுரங்காபாத் கோட்ட ஆணையர் | சுனில் கேந்த்ரேக்கர் (இஆப)[1] |
• அவுரங்காபாத் காவல் ஆணையர் | நிகில் குப்தா (இகாப)[2] |
• நா.ம.உ | இம்தியாஸ் ஜலீல் (அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்) |
• மேயர் | காலி (நிர்வாக அலுவலர்) |
• ச.ம.உகள் |
|
பரப்பளவு | |
• பெருநகர் | 139 km2 (54 sq mi) |
ஏற்றம் | 568 m (1,864 ft) |
மக்கள்தொகை (2011)[3] | |
• பெருநகர் | 11,75,116 |
• தரவரிசை | இந்தியா: 32வது மகாராட்டிரம்: 6வது ஔரங்காபாத் மண்டலம்: 1வது |
• அடர்த்தி | 8,500/km2 (22,000/sq mi) |
• பெருநகர் | 11,93,167 |
• மெட்ரோ தரவரிசை | 43வது |
இனங்கள் | Aurangabadkar, Aurangabadi |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 431 001 |
தொலைபேசி குறியீடு 0240 | 0240 |
வாகனப் பதிவு | MH 20 |
மொத்த உள்நாட்டு உற்பத்தி | $7பில்லியன்+ அமெரிக்க டாலர்[5](2019-20) |
அதிகாரப்பூர்வ மொழி | மராத்தி[6] |
சாதவாகன வம்சத்தினரின் தலைநகரான பைத்தான் (கிமு முதல் நூற்றாண்டு-கிபி இரண்டாம் நூற்றாண்டு), அத்துடன் யாதவப் பேரரசின் தலைநகரான தௌலதாபாத் அல்லது தேவகிரி (கிபி 9 ஆம் நூற்றாண்டு கிபி 14 ஆம் நூற்றாண்டு ) போன்றவை நவீன அவுரங்காபாதின் எல்லைக்குள் அமைந்துள்ளன. 1308 இல், சுல்தான் அலாவுதீன் கில்சியின் ஆட்சியின் போது இப்பகுதி தில்லி சுல்தானகத்துடன் இணைக்கப்பட்டது. 1327 ஆம் ஆண்டில், தில்லி சுல்தானகத்தின் தலைநகர் தில்லியிலிருந்து தௌலதாபாத்திற்கு (இன்றைய அவுரங்காபாத்) மாற்றப்பட்டது. அப்போதைய சுல்தானான முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சியின் போது, அவர் தில்லி மக்களை தௌலதாபாத்திற்கு பெருமளவில் குடிபெயர உத்தரவிட்டார். இருப்பினும், முகமது பின் துக்ளக் தனது முடிவை 1334 இல் மாற்றிக் கொண்டார். அதன்பிறகு தலைநகரம் மீண்டும் தில்லிக்கு மாற்றப்பட்டது. 1499 இல், தௌலதாபாத் பகுதியானது அகமதுநகர் சுல்தானகத்தின் ஒரு பகுதியாக மாறியது. 1610 ஆம் ஆண்டில், எத்தியோப்பிய இராணுவத் தலைவர் மாலிக் அம்பாரால் அகமதுநகர் சுல்தானகத்தின் தலைநகராக விளங்க நவீன அவுரங்காபாத் உள்ள இடத்தில் காட்கி என்ற புதிய நகரம் நிறுவப்பட்டது. அவர் ஒரு அடிமையாக இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டவர். ஆனால் ஒரு பிரபலமான தலைமை அமைச்சராக உயர்ந்தார். அகமதுநகர் சுல்தானகத்தில். மாலிக் ஆம்பாருக்குப் பிறகு அவரது மகன் பதே கான் பதவியேற்றார். அவர் நகரத்தின் பெயரை ஃபதேநகர் என்று மாற்றினார். 1636 ஆம் ஆண்டில், தக்காண பிராந்தியத்தின் முகலாய அரச பிரதிநிதியாக இருந்த ஔரங்கசீப், நகரத்தை முகலாயப் பேரரசுடன் இணைத்தார். 1653 ஆம் ஆண்டில், ஔரங்கசீப் நகரத்தை "அவுரங்காபாத்" என்று பெயர் மாற்றி முகலாயப் பேரரசின் தக்காணப் பகுதியின் தலைநகராக மாற்றினார். 1724 ஆம் ஆண்டில், தக்காணத்தின் முகலாய ஆளுநர், நிஜாம் முதலாம் அசஃப் ஜா , முகலாயப் பேரரசில் இருந்து பிரிந்து தானே தனியாட்சி செய்யத் துவங்கினார். அதன்படி அவர் ஆசஃப் ஜாஹி வம்சத்தை நிறுவினார். 1763 இல் தங்கள் தலைநகரை ஐதராபாத் நகருக்கு மாற்றும் வரை, அந்த வம்சத்தினர் ஐதராபாத் இராச்சியத்தை முதலில் அவுரங்காபாத்தை தங்கள் தலைநகராக கொண்டு ஆண்டுவந்தனர். ஐதராபாத் இராச்சியம் பிரித்தானிய ஆட்சியின் போது ஒரு சமஸ்தானமாக மாறியது. மேலும் 150 ஆண்டுகள் (1798-1948) சமஸ்தானமாக நீடித்தது. 1956 வரை, அவுரங்காபாத் ஐதராபாத் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1960 ஆம் ஆண்டில், அவுரங்காபாத் மற்றும் மராத்தி பேசும் பெரிய மராத்வாடா பகுதி மகாராட்டிர மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது.