அமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
அமராவதி (Amaravathi) இந்திய மாநிலம் ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்திலுள்ள ஓர் சிற்றூராகும். இது கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமராவதி மண்டலத்தில் உள்ளது.[1][4] இப்பகுதியில் அசோகர் காலத்து அமராவதி பௌத்த தொல்லியல் களம் உள்ளது.
அமராவதி
అమరావతి அம்ராவதி, அமரேசுவரம் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | குண்டூர் |
மண்டலம் | அமராவதி |
பரப்பளவு | |
• மொத்தம் | 11.70 km2 (4.52 sq mi) |
ஏற்றம் | 38 m (125 ft) |
மக்கள்தொகை (2011)[3] | |
• மொத்தம் | 13,400 |
• அடர்த்தி | 1,100/km2 (3,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்முறை | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
பின்கோடு | 522 020 |
தொலைபேசி குறி | +91–254 |
வாகனப் பதிவு | AP–7 |
அமராவதி தற்போது பேரூராட்சியால் நிர்வகிக்கப்படும் சிற்றூராக இருந்தபோதிலும்,[5] வரலாற்றில் முக்கியமான நகரமாக இருந்துள்ளது. பழங்காலத்தில் சாதவாகனர்களின் தலைநகரமாக இருந்துள்ளது.[6] இங்கு பஞ்சராமா தலங்களில் அமரராமாவில் அமைந்துள்ள சிறீ அமரலிங்கேசுவர சுவாமி கோவில் அமைந்துள்ளதால் இந்துக்களுக்கு புனிதத்தலமாக உள்ளது. தவிரவும் கி.மு இரண்டாம் நூற்றாண்டிற்கும் கி.பி மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடையே கட்டப்பட்ட அமராவதி மகாசைத்ய தாது கோபுரம் புகழ்பெற்ற புத்தத் தலமாக விளங்குகின்றது.[7] இந்திய அரசால் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அமராவதி இந்திய அரசின் பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டம் (இருதய்) கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[8]
தெலுங்கானா பிரிந்தபிறகான ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகரம், அமராவதி, இவ்விடத்தின் பேராலேயே பெயரிடப்பட்டுள்ளது.[9] ஆந்திர தலைநகர் வலயத்தில் அடங்கியுள்ள பல சிற்றூர்களில் ஒன்றாக அமராவதி உள்ளது. புதிய தலைநகருக்கான அடிக்கல் இடப்பட்ட உத்தண்டராயுனிப்பாளம் சிற்றூர் அமராவதிச் சிற்றூரிலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது.