From Wikipedia, the free encyclopedia
தோப்ரா கலான் (Topra Kalan) இந்தியாவின் அரியானா மாநிலத்தில் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் ஆகும்.[1] இக்கிராமம் சண்டிகர் நகரத்தித்திலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கிராமத்தில் பேரரசர் அசோகர் கிமு 260-இல் தூண் கல்வெட்டு ஒன்றை நிறுவினார். இத்தூண் கல்வெட்டை கிபி 1356-ஆண்டில் தில்லி சுல்தான் பெரேஸ் ஷா துக்ளக் என்பவரால் நகர்த்தப்பட்டு, தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா பகுதியில் நிறுவப்பட்டது.
தோப்ரா கலான் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 30.1252°N 77.1623°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அரியானா |
தோற்றுவித்தவர் | பேரரசர் அசோகர் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | HR |
இணையதளம் | haryana |
அசோகர் நிறுவிய தோப்ரா கலான் தூண் கல்வெட்டில் பிராமி எழுத்தில், பிராகிருத மொழியில் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளது. பின்னர் இதே கல்வெட்டில் சமசுகிருத மொழியில் சில கல்வெட்டுக் குறிப்புகள் பொறிக்கப்பட்டது.
1837-ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பிரின்ஸ்செப் என்பவரால் தோப்ரா தூண் கல்வெட்டுக் குறிப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.[2] அசோகரின் இக்கல்வெட்டுத் தூணை கிபி 1356-ஆண்டில் தில்லி சுல்தான் பெரேஸ் ஷா துக்ளக் என்பவரால் துண்டுகளாக உடைக்கப்பட்டு, தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா பகுதியில் இருந்த மசூதியில் மினார்கள் நிறுவ எடுத்துச் செல்லப்பட்டது. [3] 1857-இல் சிப்பாய்க் கிளர்ச்சி முடிவுற்ற போத் இராஜா இந்து இராவ் என்பவர் உடைக்கப்பட்ட இக்கல்வெட்டுத் தூணின் துண்டுகளை ஒன்று சேர்த்து சீரமைத்தார்.
கிமு 3-ஆம் நூற்றாண்டின் அசோகர் நிறுவிய இத்தூண் கல்வெட்டில், அசோகரின் வேறு பெயர்களான தேவனாம்பிரிய (தேவர்களுக்கு பிரியமானவன்) மற்றும் பியதாசி எனும் பெயர்கள் பிராமி எழுத்தில் பிராகிருத மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டில் அசோகரின் கொள்கைகளை விவரிப்பதுடன பௌத்த தர்ம நெறிகளை கடைப்பிடித்தல் (நியாயமான, நல்லொழுக்கமான வாழ்க்கை), தார்மீக விதிகள் மற்றும் சுதந்திரம் போன்ற விஷயங்களில் மௌரியப் பேரரசின் மக்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் வேண்டுகோள் விடுக்கிறது. தோப்ரா கலான் தூண் கல்வெட்டுக் குறிப்புகளை ஜேம்ஸ் பிரின்செப் என்பவர் 1837-இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சில பகுதிகள் பின்வருமாறு:[4]
2015-ஆம் ஆண்டில் அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் 50 கோடி ரூபாய் செலவில் யமுனாநகர் மாவட்டத்தில் தேப்ரா கலான் கிராமத்தில் அசோகரின் 7 தூண் மற்றும் 8 பாறைக் கல்வெட்டுக்களைக் கொண்டு ஒரு பூங்கா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. [5][6][7][8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.