காரைக்கால்
இது புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மாவட்ட தலைநகரும் மற்றும் தேர்வு நிலை நகராட்சி ஆகும் / From Wikipedia, the free encyclopedia
காரைக்கால் (ஆங்கிலம்:Karaikal), இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள காரைக்கால் மாவட்ட தலைநகர் ஆகும். இது காவிரியின் கழிமுகத்தில் அமைந்துள்ளது. காரைக்கால் தமிழகத்தின் கடற்கரை பகுதியின் மத்தியில் அமைந்திருக்கும் துறைமுக நகரம் ஆகும். கி.பி நான்காம் நூற்றாண்டில் பிறந்த மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமான புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் பிறந்த ஊர். காரைக்கால், ஏனாம், மாகி ஆகியவை பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்கள். புதுச்சேரி மாவட்டம் மட்டும் பொருளாதாரத்தில் உயர்த்தவை.
காரைக்கால் | |||
— தேர்வு நிலை நகராட்சி — | |||
அமைவிடம் | |||
நாடு | இந்தியா | ||
பகுதி | சோழ நாடு | ||
மாநிலம் | பாண்டிச்சேரி | ||
மாவட்டம் | காரைக்கால் | ||
ஆளுநர் | தமிழிசை சௌந்தரராஜன்[1] | ||
முதலமைச்சர் | வி. நாராயணசாமி, ந. ரங்கசாமி[2] | ||
மக்களவைத் தொகுதி | காரைக்கால் | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.karaikal.gov.in |
காரைக்கால், சென்னை மாநகரில் இருந்து 310 கி.மீ. தொலைவில், தமிழகத்தின் கடற்கரை பகுதியின் மத்தியில், வங்கக் கடலோரத்தில் அமைந்த இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதி ஆகும். இது பிரெஞ்சு நாட்டின் பகுதியாக இருந்தது. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சுச் சொற்களை வெகு லாகவமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் காக்கி நாடாவுக்கு அருகாமையிலுள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் கடலூரின் அருகாமையிலுள்ள புதுச்சேரி நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகிலுள்ள மாஹே நகரும் இந்த மாநிலத்தின் (ஆட்சிப் பகுதியின் பிராந்தியங்கள்) அங்கமாகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன் தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையாக இருக்கிறார்கள்.