விஷூ
From Wikipedia, the free encyclopedia
விஷு (Vishu, மலையாளம்: വിഷു) தென் இந்தியாவில் கேரளா மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இது வருட பிறப்பு என்ற பெயரில் கர்நாடகாவின் துளுப்பகுதியிலும், தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படுகிறது. இது மலையாளப் புத்தாண்டைக் குறிக்கும் பண்டிகையாகும். இது மேடம் (ஏப்ரல் - மே) மாதத்தின் வரும் சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. விஷஷு கோள்களின் நிலை கொண்டு இளவேனில் சமதின நாள் ஏற்படும் போது அதாவது கிரிகோரியன் வருடத்தின் படி ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சூரியன் இந்திய சோதிட கணக்கின் படி இராசி மண்டலத்தில், மேஷ இராசி க்குள் நுழைகிறார் (முதலாவது ராசி ). விஷு என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் "சமம்" என்று பொருள். வருடத்தின் ஓர் சமதின நாளைக் குறிப்பதாலேயே அவ்வாறு அழைக்கப் பெற்றிருக்கலாம். இது அறுவடை பண்டிகையாக கேரளாவில் கொண்டாடப்படுவதால் எல்லா மலையாளிகளுக்கும் இது முக்கியமான பண்டிகையாகக் கருதப்படுகிறது.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
விஷு | |
---|---|
அதிகாரப்பூர்வ பெயர் | விஷு |
கடைபிடிப்போர் | மலையாளிகள் மற்றும் பாலக்காடு தமிழர்கள் |
அனுசரிப்புகள் | விஷூ கனி & விஷூக்கை நீட்டம் |
நாள் | மேடம் முதல் நாள் (மலையாள நாள்காட்டி) |
விஷு\ (மேடத்தின் முதல் நாள் ) ஆருட புத்தாண்டாக கொண்டாடப்படினும் அதிகாரப்பூர்வமாக சிங்க மாதத்தின் (ஆகஸ்ட் - செப்டம்பர்) முதல்நாளே மலையாள புத்தாண்டு தினமாகக் குறிக்கப்பட்டுள்ளது.
இந்நாளில் இவர்களின் தெய்வமாகிய விஷுக்கணி க்கு படையல்கள் அளிக்கப்படுகின்றது. அவர்களது பூஜை அறையில் புனிதமாக, அரிசி, புதிய துணி, வெள்ளரிக்காய், வெற்றிலை, பாக்கு, உலோகக் கண்ணாடி, மஞ்சள் நிற கொன்றை மலர் (காசியா பிஸ்டுலா ), தெய்வீகமான புத்தகங்கள் மற்றும் காசுகளை வெங்கல உருளி யில் வைத்துப் படைக்கின்றனர். வெண்கல நிலா விளக்கை யும் ஏற்றி அருகே வைத்திருப்பர். இவ்வெல்லாவற்றையும் முதல் நாளே ஏற்பாடு செய்து வைத்து விடுவர். விஷூ அன்று விடியற்காலையில் எழுந்து கண்களை திறக்காமல் நேரே பூஜை அறைக்குச் சென்று விஷூக்கனியின் முன்னரே விழிக்கின்றனர். இந்நாள் இவர்களின் புத்தாண்டின் துவக்கமாகையால் புனித புத்தகமாகிய இராமாயணத்தின் பகுதிகளை விஷூக்கனியைக் கண்டபின் படித்து மகிழ்வர். சிலர் இராமாயணத்தின் எப்பக்கத்தை அவர்கள் திறந்து படிக்கிறார்களோ அது அவர்களின் புத்தாண்டின் தன்மையை ஒத்திருக்கும் என நம்புகின்றனர். அன்றைய தினம் பக்தர்கள் காலையில் சபரிமலை ஐயப்பன், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிய கோயில்களை அடைந்து "விஷூக்கனி காழ்சா" என்ற அவரின் காட்சியை தரிசிக்க முனைகின்றனர்.
விஷூ மிகவும் விமர்சையாகவும் பெரிய அளவிலும் மற்ற பகுதிகளைக் காட்டிலும் வட கேரளாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[மேற்கோள் தேவை] இந்நாளில் குறிப்பாக சிறார்கள் பட்டாசு வெடித்து மகிழ்வர். பெரியவர்கள் பட்டாசுகளை சிறார்களுக்கு பரிசாக வழங்குவர். இந்நாளில் மக்கள் புத்தாடைகளை (புதுக்கொடி ) அணிந்து மகிழ்கின்றனர். மேலும், வீட்டுப் பெரியவர்கள் சிறுவர்களுக்கும் தன்னிடம் வேலை செய்வோருக்கும் மற்றும் தன்னுடன் குடியிருப்போருக்கும் அன்பளிப்பாக விஷூக்கை நீட்டம் என்ற பணத்தை வழங்கி மகிழ்வர்.
விஷு அன்று விருந்தும் அளிக்கப்படுகின்றது, இதில் அனைத்து ருசிகளும் அதாவது உப்பு, இனிப்பு, புளிப்பு மற்றும் கசப்புகளும் சம அளவில் இருக்குமாறு சமைக்கின்றனர். விருந்தில் வேப்பம்பூ ரசமும் (கசப்பான வேப்பமரப் பூ) மாம்பழ பச்சடி யும் (புளிப்பான மாம்பழச் சாறு) பரிமாறப்படுகின்றன.