விஜயநகரம் (கர்நாடகம்)
From Wikipedia, the free encyclopedia
விசயநகரம் (Vijaya Nagara), இந்தியாவின், மத்திய கருநாடகா மாநிலத்தின், விசயநகர மாவட்டத்தில் உள்ளது. 13-ஆம் நூற்றாண்டில் அரிகரா மற்றும் புக்கா எனும் சங்கம மரபு சகோதரர்களால், வித்யாரண்யர் என்ற அந்தண முனிவரின் துணையுடன் நிறுவப்பட்டது விசயநகரப் பேரரசு.
விரைவான உண்மைகள் விசய நகரம் (கருநாடகம்), இருப்பிடம் ...
விசய நகரம் (கருநாடகம்) | |
---|---|
ஏமகூட மலையிலிருந்து விருபாட்சர் கோயில் வளாகம் | |
இருப்பிடம் | அம்பி, விசயநகர மாவட்டம், கருநாடகம், இந்தியா |
பகுதி | அம்பி நினைவுச் சின்னங்களின் தொகுப்பு |
வகை | தொல்லியல் களம் |
பரப்பளவு | 650 சதுர கி. மீ., |
பகுதிக் குறிப்புகள் | |
இணையத்தளம் | http://whc.unesco.org/en/asia-pacific/ |
வகை | தொல்லியல் களம் |
அளவுகோல் | i, iii, iv |
வரையறுப்பு | 1986 (10th session) |
சுட்டெண் | 241 |
உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - இந்தியா | |
மூடு
இந்நகரம் விசயநகரப் பேரரசின் தலைநகராக விளங்கியது. தில்லி மொகலாயப் 16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தில்லி மொகலாய பேரரசு மற்றும் தக்கானச் சுல்தானகளின் இடையறாத தாக்குதல்களாலும் 1565-இல் விசயநகரப் பேரரசு வீழ்ந்த காரணத்தால், விசயநகரமும் பொலிவிழந்தது. தற்போது இந்நகரம் அம்பி எனும் பெயரால் விளங்குகிறது. தற்போது சிதலமடைந்த விசயநகரம் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக விளங்குகிறது.[1]