வழிநூல்
From Wikipedia, the free encyclopedia
தமிழில் தோன்றிய நூல்களை அதன் உருவாக்கத்தைக் கருத்தில் கொண்டு இலக்கண நூல்கள் வகைப்படுத்திப் பார்க்கின்றன.
- தொல்காப்பியப் பார்வை
தொல்காப்பியம் நூல்களை முதல்நூல், வழிநூல் என இரண்டாக வகைப்படுத்துகிறது. [1]
வழிநூல் முதல்நூலின் வழியே தோன்றும் நூல் என்கிறது. [2]
தொல்காப்பியம் வழிநூலை
- முதல்நூலைத் தொகுத்துச் சுருக்கமாகக் கூறும் நூல்,
- முதல்நூலை விரிவுபடுத்திக் கூறும் நூல்,
- முதல்நூலைத் தொகுத்தும் விரித்தும் கூறும் நூல்,
- முதல்நூலை மொழிபெயர்த்துக் கூறும் நூல்
என மேலும் நான்கு வகைப்படுத்திப் பார்க்கிறது. [3] [4]
- நன்னூல் பார்வை
நன்னூல் நூலை மூன்று வகைப்படுத்துகிறது.
- முதல்நூல்,
- வழிநூல்,
- சார்புநூல்
என்பன அவையாகும். [5]
- வழிநூல் - முதல்நூலின் கருத்துகளை முழுமையாக ஏற்று, பின்னோன் சில வேறுபாடுகளைக் கூட்டிக் கூறுவது வழிநூல். [6]
- சார்பு-நூல் என்னும் புடைநூல் - முதல்நூலில் ஒரு பகுதியையும், வழிநூலின் ஒரு பகுதியையும் ஏற்றுக்கொண்டு, அவர்களோடு மாறுபட்டுக் கூறும் நூல் புடைநூல் எனப்படும். [7]