வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/23
From Wikipedia, the free encyclopedia
ரோகித் குருநாத் சர்மா (Rohit Gurunath Sharma, பிறப்பு: ஏப்ரல் 30 1987, இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இந்திய அணியின் உதவித்தலைவராக உள்ளார். மும்பை அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளிலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராகவும் விளையாடி வருகிறார். இவர் வலது கை மட்டையாளரும் பகுதிநேர வலது கை புறத்திருப்ப பந்துவீச்சாளரும் ஆவார். இவர் தற்போது உள்ள சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இவர் ஒருநாள் துடுப்பாட்ட வரலாற்றில் அதிக ஓட்டங்கள் (264) எடுத்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 3 முறை இருநூறு எடுத்த ஒரே வீரர் இவர் மட்டுமே. தற்போது ஐசிசியின் ஒருநாள் மட்டையாளர்கள் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளார்.