வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு
From Wikipedia, the free encyclopedia
வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு (Northern Black Polished Ware culture) (சுருக்கப் பெயர்: NBPW or NBP) கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு மற்றும் சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு காலத்திற்கு பின்னர் இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கிலும், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவிலும் இரும்புக் காலத்தின் இறுதியில் கிமு 700 - 200க்கும் இடைப்பட்ட காலத்தில் செழித்திருந்த நகரப் பண்பாட்டுக் காலமாகும்.[1]
பிந்தைய வேதகாலத்தின் துவக்கத்தில் கிமு 700 முதல் துவங்கிய வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு, கிமு 500 - 300 காலங்களில் உச்சத்தில் இருந்தது. இக்காலகட்டத்தில் வட இந்தியாவில் ஹரியங்கா வம்சத்தின் மகத நாடு உள்ளிட்ட 16 நகர மகாஜனபத அரசுகள் எழுச்சி கொண்டது.