ரோகண விஜயவீர
From Wikipedia, the free encyclopedia
பட்டபெந்தி தொன் நந்தசிறி விஜேவீர (Patabendi Don Nandasiri Wijeweera, சிங்களம்: පටබැඳි දොන් නන්දසිරි විජෙවීර, ஜூலை 14, 1943 - நவம்பர் 13, 1989) ஒரு மார்க்சியப் புரட்சியாளர். இலங்கையின் தீவிரவாத இயக்கமாக இருந்த ஜே.வி.பி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியை அமைத்து அதன் தலைவராக இருந்தவர். பொலிவியாவின் புரட்சியாளரான சே குவேராவின் வழிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றியவர். இவரது கம்யூனிசக் கொள்கைகள் இலங்கையின் வறிய மக்களிடையேயும் இளைஞர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவர் தலைமையில் மக்கள் விடுதலை முன்னணி இலங்கையில் இரு முறை (1971 புரட்சி, 1987-1989 புரட்சி) புரட்சிகளில் இறங்கி தோல்வி அடைந்தது.[1][2] இவர் உலப்பனை என்ற இடத்தில் வைத்து இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அடுத்த நாள் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.[3]
விரைவான உண்மைகள் ரோகண விஜயவீரRohana Wijeweera, பிறப்பு ...
ரோகண விஜயவீர Rohana Wijeweera | |
---|---|
பிறப்பு | பத்தபெந்தி டொன் நந்தசிறி விஜயவீர (1943-07-14)சூலை 14, 1943 கொட்டேகொடை, தென் மாகாணம், இலங்கை |
இறப்பு | நவம்பர் 13, 1989(1989-11-13) (அகவை 46) பொறளை, மேல் மாகாணம், இலங்கை |
அமைப்பு(கள்) | மக்கள் விடுதலை முன்னணி |
மூடு