ரவூப் ஹக்கீம்
From Wikipedia, the free encyclopedia
அப்துல் ரவூப் ஹக்கீம் (Abdul Rauff Hakeem, பிறப்பு: ஏப்ரல் 13, 1960), இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், முசுலிம் அரசியல்வாதியும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் கண்டி மாவட்டத்தில் இருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஆவார். இவர் 1994, 2000, 2001, 2004 தேர்தல்களிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.[1] இவர் 2015 செப்டம்பர் 4 அன்று நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2][3] [4]
விரைவான உண்மைகள் ரவூப் ஹக்கீம்Rauff Hakeem, நகர அபிவிருத்தி, மற்றும் நீர்ப்பாசனம், நீர்விநியோக அமைச்சர் ...
ரவூப் ஹக்கீம் Rauff Hakeem | |
---|---|
![]() | |
நகர அபிவிருத்தி, மற்றும் நீர்ப்பாசனம், நீர்விநியோக அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 சனவரி 2015 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
நீதி அமைச்சர் | |
பதவியில் 22 நவம்பர் 2010 – 28 டிசம்பர் 2014 | |
முன்னையவர் | அத்தாவுட செனிவிரத்தின |
தபால், தொலைத்தொடர்பு அமைச்சர் | |
பதவியில் 2005–2010 | |
இலங்கை நாடாளுமன்றம் for கண்டி மாவட்டம் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 13, 1960 (1960-04-13) (அகவை 64) நாவலப்பிட்டி |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு |
துணைவர் | சானாசு அக்கீம் |
வாழிடம்(s) | 263, காலி வீதி, Colombo 03 |
முன்னாள் கல்லூரி | கொழும்பு றோயல் கல்லூரி |
வேலை | வழக்கறிஞர் |
தொழில் | LLB, LLM |
மூடு