மூன்றாம் பிறை (திரைப்படம்)
பாலுமகேந்திரா இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
மூன்றாம் பிறை (Moondram Pirai) 1982ஆம் ஆண்டில் வந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்குனர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.[1]
விரைவான உண்மைகள் மூன்றாம் பிறை, இயக்கம் ...
மூன்றாம் பிறை | |
---|---|
இயக்கம் | பாலுமகேந்திரா |
தயாரிப்பு | டி. ஜி. தியாகராஜன் ஜி. சரவணன் |
கதை | பாலுமகேந்திரா |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீதேவி சில்க் ஸ்மிதா ஒய். ஜி. மகேந்திரன் |
ஒளிப்பதிவு | பாலுமகேந்திரா |
படத்தொகுப்பு | டி. வாசு |
கலையகம் | சத்ய ஜோதி படங்கள் |
விநியோகம் | சத்ய ஜோதி படங்கள் |
வெளியீடு | 19 பெப்ரவரி 1982 (1982-02-19) |
ஓட்டம் | 143 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூடு
இத்திரைப்படம் 330 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடிய காதல்படம்மாகும்.[2] 1983 ஆண்டில் இத்திரைப்படத்தை பாலுமகேந்திரா அவர்கள் இந்தி மொழியிலும் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் 'சந்மா' எனும் பெயரில் மீண்டும் எடுத்து வெளியிட்டார்.
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பணியாற்றி கடைசி திரைப்படம் இதுவாகும். "கண்ணே கலைமானே" எனும் பாடல் தான் அவர் இறப்பதற்கு முன்பாக எழுதிய கடைசி பாடலாகும்.