முப்பதாண்டுப் போர்
From Wikipedia, the free encyclopedia
முப்பதாண்டுப் போர் (1618–1648) என்பது ஒரு மதப்பின்னணி கொண்ட போர் ஆகத் தொடங்கியது. இது முக்கியமாக ஜெர்மனியிலேயே இடம்பெற்றாலும் பெரும்பாலான ஐரோப்பிய அரசுகள் இதில் ஈடுபட்டிருந்தன. புனித ரோமானிய பேரரசர் பெர்டினாண்ட் இரண்டாம் போமியா குடிமக்களின் மதம் சார்ந்த உரிமைகளை குறைக்க முயன்ற போது, புராட்டஸ்டன்ட் மக்களிடையே ஏற்பட்ட கிளர்ச்சியின் மூலம் முப்பது ஆண்டுகள் போர் (1618-48) தொடங்கியது. இந்தப் போரில் ஐரோப்பாவின் முக்கிய சக்திகளான, சுவீடன், பிரான்சு, இசுபெயின் மற்றும் ஆஸ்திரியா ஆகியவற்றையும் செருமானிய மண்ணில் போர் தொடுக்கும் பிரச்சாரங்களை நடத்தி உள்ளிழுத்துக் கொண்டது. இந்தப் போரினால் ஏற்பட்ட வீழ்ச்சியானது மத்திய ஐரோப்பாவின் மத மற்றும் அரசியல் வரைபடத்தை மாற்றியமைத்தது, பழைய உரோமானிய கத்தோலிக்கப் பேரரசிடம் குவிக்கப்பட்டிருந்த அதிகார மைய அரசியலிலிருந்து விடுபட்டு தனித்த இறையாண்மையைக் கொண்ட மாநிலங்களின் சமூகத்திற்கு வழிவகுத்தது.[8] புனித ரோமப் பேரரசில் புரட்டஸ்தாந்தினருக்கும், கத்தோலிக்கருக்கும் இடையிலான போராகத் தொடங்கிய இப்போர் படிப்படியாக முழு ஐரோப்பாவும் தழுவிய அரசியல் போராக வளர்ச்சியுற்றது. முப்பதாண்டுப் போர், ஐரோப்பிய அரசியல் முன்னிலைக்காக போர்பொன்-ஹப்ஸ்பர்க் போட்டியின் தொடர்ச்சியாகும். இந்த அரசியல் போட்டி பிரான்சுக்கும், ஹப்ஸ்பர்க் அரசுகளுக்கும் இடையே மேலும் சண்டைகளை உருவாக்கியது.கூலிப்படை வீரர்களால் செய்யப்பட்ட அட்டூழியங்களின் ஒரு பகுதியாக அறியப்பட்ட இந்த யுத்தம் வெஸ்ட்பேலியாவின் அமைதியை உருவாக்கிய தொடர்ச்சியான ஒப்பந்தங்களுடன் முடிவடைந்தது.
முப்பதாண்டுப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
வெஸ்ட்பேலியா அமைதிக்குப் பின்னான ஐரோப்பாவின் நிலப்படம், 1648. புனித ரோமப் பேரரசுக்கு உட்பட்ட சிறிய ஜேர்மன் நாடுகள் சாம்பல் நிறத்தில் காட்டப்பட்டுள்ளன. |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
![]()
| ![]() |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
![]()
| ![]()
|
||||||
பலம் | |||||||
~495,000, 150,000 சுவேடுகள், 20,000 டேனியர், 75,000 டச்சு, ~100,000 ஜேர்மானியர், 150,000 பிரெஞ்சு | ~450,000, 300,000 எஸ்பானியர், ~100-200,000 ஜேர்மானியர் |
பெரும்பாலும் கூலிப்படைகளின் மூலமே இடம்பெற்ற இப் போரினால் ஏற்பட்ட முக்கிய தாக்கம் முழுப் பகுதிகளிலுமே ஏற்பட்ட பேரழிவுகள் ஆகும். பஞ்சம், நோய்கள் என்பனவற்றினால் ஜெர்மானிய நாடுகளிலும், கீழ் நாடுகளிலும், இத்தாலியிலும் மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது. போரில் பங்கு பெற்ற பல நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாயின. போரை உருவாக்கிய சில பிணக்குகள் தீர்க்கப்படாமலேயே நீண்ட காலம் தொடர்ந்தன.