முதுமலை தேசியப் பூங்கா
இந்தியாவின், தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில், நீலமலைகளில் அமைந்துள்ள 'முதுமலை புலிகள் காப / From Wikipedia, the free encyclopedia
முதுமலை தேசிய பூங்கா அல்லது முதுமலை வனவிலங்கு காப்பகம் (Mudumalai National Park) ஆனது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் வடமேற்கில் கர்நாடகம் மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. 1940-இல் தொடங்கப்பட்ட இதுவே தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகம் ஆகும்.
விரைவான உண்மைகள் முதுமலை தேசியப் பூங்கா, அமைவிடம் ...
முதுமலை தேசியப் பூங்கா | |
---|---|
முதுமலை புலிகள் உய்வகம் | |
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
முதுமலை யானை முகாமில் வளர்ப்பு யானை | |
அமைவிடம் | நீலகிரி மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா |
அருகாமை நகரம் | கூடலூர், நீலகிரி |
ஆள்கூறுகள் | 11°35′N 76°33′E |
பரப்பளவு | 321 km2 (124 sq mi) |
ஏற்றம் | 850–1,250 m (2,790–4,100 அடி) |
நிறுவப்பட்டது | 1940 (1940) |
நிருவாக அமைப்பு | தமிழ்நாடு வனத்துறை |
வலைத்தளம் | https://www.forests.tn.gov.in/ |
மூடு
தொடக்கத்தில் 60 சதுர கிமீ பரப்பு கொண்டதாக இக்காப்பகம் இருந்தது. பின் 1956-ஆம் ஆண்டு 295 கி.மீ.2 ஆக விரிவுபடுத்தப்பட்டது. இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு தற்போதுள்ள 321 கி.மீ.2 பரப்பளவை அடைந்துள்ளது. மேலும் இந்த தேசியப் பூங்கா யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1]