![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ee/Niltahr.jpg/640px-Niltahr.jpg&w=640&q=50)
தமிழ்நாடு வனத்துறை
From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாடு வனத்துறை தமிழக மாநிலத்திற்குட்பட்ட காட்டுப்பகுதிகளின் பராமரிப்பையும் பாதுகாப்பையும் மேற்கொண்டு அவற்றின் வளர்ச்சியில் பங்கு கொள்கிறது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ee/Niltahr.jpg/640px-Niltahr.jpg)
தமிழ்நாட்டின் வனப்பகுதி சுமார் 22,877 ச.கி.மீ[2] பரப்பளவைக் கொண்டது. இது தமிழ்நாட்டுப் புவிப்பரப்பளவில் 17.59% ஆகும். தேசிய வனக் கொள்கை, 1988-இன்படி மாநிலமொன்றின் புவிப்பரப்பளவில் 33.33% வனங்களாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாறுபட்ட தட்பவெப்ப நிலை, இடவியல்பு, மண் (அ) நிலவியல்பு, நீராதாரம், உயர்நிலை மற்றும் உயிரினங்களின் ஆதாரங்கள் இவற்றை வைத்து பல்வேறுபட்ட சமூகக் காடுகள் அல்லது சமுதாய வனங்களை உருவாக்கும் காரணிகளாக செயல்படுகின்றன. பொதுவாக இவைகள் வனங்களின் வகைகள் எனப்படுகின்றன.
மாநில அரசு வனப்பகுப்பாக, நிறப்பிரிகையாக வனத் தாவர வளர்ச்சியை ஈரப்பதமுள்ள பசுமை மாறாக் காடுகள் முதல் குறை ஈரப்பதமுள்ள இலையுதிர் காடுகள் வரை தனது கவனத்தை செலுத்துகின்றது. மதிப்பிடற்கரிய மரங்களான சந்தனம், தேக்கு மற்றும் கருங்காலி மரம் மற்றும் காட்டு விலங்குகளான புலி, யானை, சோலைமந்தி (சிங்க வால் குரங்கு)[2], சாம்பல் நிற அணில்[2] மற்றும் அரிய வகை உட்பிரதேசத்திற்குரிய விலங்கினங்கள் மற்றும் எண்ணிலடங்கா இனங்களான முக்கிய மருத்துவத் தாவரங்களை உள்ளடக்கிய ஒரு பிரதேசத்திற்குரிய தாவரங்கள்) இவற்றின் பாதுகாப்பு வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்துகின்றது.
தமிழ்நாடு மாநில வனச் சட்டம், 1882, வனவுயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972, வனப் பாதுகாத்தல் சட்டம், 1980 மற்றும் அதன் துணை விதிகள் இச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இவ்வனங்கள் வனத்துறையினரால் பாதுகாக்கப்படுகின்றது[2].