![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4a/The_Obelsik_marking_the_Durbar_of_King_George_V_at_Coronation_Park%252C_Delhi.2JPG.jpg/640px-The_Obelsik_marking_the_Durbar_of_King_George_V_at_Coronation_Park%252C_Delhi.2JPG.jpg&w=640&q=50)
முடிசூட்டுப் பூங்கா, தில்லி
From Wikipedia, the free encyclopedia
முடிசூட்டுப் பூங்கா (Coronation Park) என்பது இந்தியாவின் தில்லியில் நிரங்காரி சரோவர் அருகில் புராரி சாலையில் அமைந்துள்ள பூங்காவாகும். இது சில நேரங்களில் முடிசூட்டு நினைவகம் எனக் குறிப்பிடப்படுகின்றது. 1877இல் இங்குதான் தில்லி தர்பார் நடந்தது; ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா அப்போது இந்தியாவின் பேரரசியாக பறைசாற்றப்பட்டார். பின்னர் 1903இல் ஏழாம் எட்வர்டு அரசர் வழிமுறையாக அரியணை ஏறியபோதும் தொடர்ந்து ஐந்தாம் ஜோர்ஜ் அரியணை ஏறியபோதும் தில்லி தர்பார் இங்கு நடந்தது. 1911இல் நடந்த தர்பாருக்கு அனைத்து மன்னரரசர்களும் அவைக்கு வந்திருந்தனர். தில்லியின் வரலாற்றை வலியுறுத்தும் வண்ணம் முடிசூட்டுப் பூங்காவின் திறந்தவெளியில் தர்பார் நடத்த முடிவெடுக்கப்பட்டது.[1][2][3]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4a/The_Obelsik_marking_the_Durbar_of_King_George_V_at_Coronation_Park%2C_Delhi.2JPG.jpg/640px-The_Obelsik_marking_the_Durbar_of_King_George_V_at_Coronation_Park%2C_Delhi.2JPG.jpg)
இந்த நினைவுச் சின்னம் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.
1960களில் புது தில்லியின் மையத்தில் இந்தியாவின் வாயிலுக்கு எதிராக இருந்த மிகப் பெரிய, உயரமான ஐந்தாம் ஜோர்ஜ் அரசரின் சிலை இங்கு இடம்பெயர்க்கப்பட்டது. சதுரக்கூம்பகத்தூணின் எதிராக இது நிறுவப்பட்டுள்ளது.[1][2][4][5]