மிசெல் பாச்செலெட்
From Wikipedia, the free encyclopedia
வெரோனிக்கா மிசெல் பாச்செலெட் ஹெரியா (Verónica Michelle Bachelet Jeria /βeˈɾonika miˈʃɛl baʃˈle ˈçeɾja/, பிறப்பு: செப்டம்பர் 29, 1951) இருமுறை குடியரசுத் தலைவராகவிருந்த சிலி நாட்டின் அரசியல்வாதி ஆவார். இவரே சிலியில் முதலாவது பெண் குடியரசுத் தலைவர். இவர் முதன்முதலாக 2006 ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்டார்.[1] இவர் மருத்தவத்தில் அறுவை மருத்துவம், குழந்தை மருத்துவம், நோய்ப்பரவல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர். படைத்துறை கோட்பாட்டு முறைகளிலும் தேர்ந்தவர். பெரும்பாலும் கத்தோலிக மதத்தைப் பின் பற்றும் சிலி நாட்டில் தன்னை கடவுள் உண்டா-இல்லையா என அறியா நிலைக்கொள்கை உடையவராக அறிவித்துள்ளவர். 2007 ஆண்டில் உலகில் மிகவும் வல்லமை மிக்க 100-பெண்மணிகள் வரிசையில் 27 ஆவதாக ஃவோர்ப்ஸ் ஆங்கில இதழ் இவரை சுட்டுகின்றது.
மிசேல் பசிலேற் | |
---|---|
சிலியின் சனாதிபதி | |
பதவியில் மார்ச் 11, 2006 – 2010 | |
முன்னையவர் | ரிகாடோ லாகோஸ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 29, 1951 சந்தியாகோ சிலி |
அரசியல் கட்சி | சிலி சோசலிச கட்சி |
முதல்முறைப் பதவிக்காலம் முடிந்த பிறகு, அரசியல் சட்டப்படி, மீண்டும் தேர்தலில் நிற்கவியலாதபோது புதியதாக உருவாக்கப்பட்ட ஐ.நா. பாலினச் சமநிலை மற்றும் மகளிர் அதிகார மையத்தின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். திசம்பர் 2013இல் தம் நாட்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் மீளவும் போட்டியிட்டு 62% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். 1932ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாம் முறை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவரே என்ற பெருமை பெற்றார்.[2]
ஆகத்து 2018இல் இவரை அடுத்துவரும் மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஆணையராக ஐக்கிய நாடுகள் அவை நியமித்துள்ளது.[3]