மாதங்கி
தசமகாவித்யா / From Wikipedia, the free encyclopedia
மாதங்கி (ஆங்கிலம்: Matangi; சமஸ்கிருதம்: मातंगी) என்பவர் மகாவித்யா, எனப்படும் பத்து தந்திர தெய்வங்களிள் ஒருவர். இவர் பார்வதியின் ஆங்கார அம்சமாக கருதப்படுகிறார். மாதங்கி என்பவர் சைவ சமயக்கடவுளான சிவபெருமானின் மனைவியாவார். இவர் பிரம்மாவின் குமாரனாகிய மதங்க முனிவரின் மகளாக எனப்படுகிறார். மேலும், மாதங்கி சரஸ்வதி யின் தாந்த்ரீக வடிவமாகக் கருதப்படுகிறாள். சரசுவதியைப் போலவே, மாதாங்கியும், பேச்சு, இசை, அறிவு மற்றும் கலைகளை நிர்வகிக்கிறார். அமானுஷ்ய சக்திகளைப் பெறுவதற்கும், குறிப்பாக எதிரிகளின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும், மக்களைத் தன்னிடம் ஈர்ப்பதற்கும், கலைகளில் தேர்ச்சி பெறுவதற்கும், உயர்ந்த அறிவைப் பெறுவதற்கும் மாதங்கி தேவியின் வழிபாடு பரிந்துரைக்கப்படுகிறது.
மாதங்கி வழிபாடு பெரும்பாலும் மாசுபாடு, தீங்கு விளைவித்தல் மற்றும் இந்து சமுதாயத்தின் கடைநிலை ஆகியவற்றுடன் தொடர்புடையது, இது அவரது மிகவும் பிரபலமான வடிவத்தில் காணப்படுகிறது. இவ் வடிவம் 'உச்சிஷ்டா - சண்டலினி' அல்லது 'உச்சிஷ்டா-மாதாங்கினி' என அழைக்கப்படுகிறது.[1] அவள் ஒரு தலித் இன மக்களின் கடவுளாக (சந்தலினி) என்று விவரிக்கப்படுகிறாள். மேலும், ( உச்சிஷ்டா ) என்பது சாப்பிட்ட பிறகு கழுவப்படாத கைகள் அல்லது இடது கையில் உணவு உண்பது போன்ற பொருளில் உள்ளதால் இவை இரண்டும் பண்டைய இந்து மதத்தில் தூய்மையற்றதாகக் கருதப்பட்டன.[2]
மாதங்கி என்பது மரகத பச்சை வண்ணத்தைக் குறிக்கிறது. உச்சிஷ்டா மாதங்கினியின் கைகளில் உடுக்கை, வாள், மண்டையோடு போன்றவை காணப்படுகிறது. இவரின் இன்னொரு தோற்றமான ராஜ மாதங்கியின் உருவம் வீணை வாசிப்பவராகவும், கிளியை வைத்திருப்பவராகவும் சித்தரிக்கப்படுகிறது.