![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/88/Universiti_Malaya_KL_gate.jpg/640px-Universiti_Malaya_KL_gate.jpg&w=640&q=50)
மலாயா பல்கலைக்கழகம்
கோலாலம்பூரில் உள்ள பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகம் / From Wikipedia, the free encyclopedia
மலாயா பல்கலைக்கழகம் (மலாய்:Universiti Malaya; ஆங்கிலம்:University of Malaya; ஜாவி: ونيۏرسيتي ملايا சீனம்: 馬來亞大學) என்பது மலேசியாவின் மிகப் பழைய பல்கலைக்கழகம் ஆகும். 1905-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் கோலாம்பூருக்கு அருகே லெம்பா பந்தாய் பகுதியில் அமைந்துள்ளது. இது உலகின் முன்னணிப் பல்கலைக்கழங்களில் ஒன்றாகும்.
![]() மலாயா பல்கலைக்கழகத்தின் நுழைவாசல் | |
முந்தைய பெயர் | மன்னர் ஏழாம் எட்வர்ட் மருத்துவக் கல்லூரி ராபிள்ஸ் கல்லூரி சிங்கப்பூரின் மலாயா பல்கலைக்கழகம் |
---|---|
குறிக்கோளுரை | அறிவுதான் முன்னேற்றத்தின் ஆதாரம் (Ilmu Puncha Kemajuan) (Knowledge is the Source of Progress) |
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் (ஆய்வுப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 28 செப்டம்பர் 1905; 118 ஆண்டுகள் முன்னர் (1905-09-28)[1][2] |
நிதிக் கொடை | MYR 633 மில்லியன். (2021)[3] (US $135 மில்லியன்) |
வேந்தர் | பேராக் சுல்தான் நசுரின் சா |
துணை வேந்தர் | பேராசிரியர் டத்தோ நூர் அசுவான் அபு ஒசுமான் |
மாணவர்கள் | 35,054 (2023)[4] |
பட்ட மாணவர்கள் | 20,181 (2023)[4] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 14,873 (2023)[4] |
அமைவிடம் | Universiti Malaya, 50603 , , 3°07′15″N 101°39′23″E |
நிறங்கள் | சிவப்பு, பொன், நீலம் |
சேர்ப்பு | பொ.ப.கூ, பசிபிக் விளிம்பு பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, தென்கிழக்காசிய உயர் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு, ஆசியான் பல்கலைக்கழகப் பிணையம், இசுலாமிய உலகப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு,[5] |
இணையதளம் | www |
மலாயா சுதந்திரம் அடைந்த போது மலாயாவில் இருந்த ஒரே பல்கலைக்கழகம் இதுவாகும்.[6] மலேசியாவின் ஐந்து பிரதமர்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல், வணிகம் மற்றும் கலாசாரப் பிரமுகர்கள்; இந்தப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் ஆவார்கள்.[7]
இங்கு தமிழ் மொழிப் பட்டப் படிப்பும் வழங்கப்படுகிறது. மலாயா பல்கலைக்கழகத்தில் இரண்டு புலங்களில் தமிழ்மொழி கற்பிக்கப்படுகின்றது. கல்வி புலத்தில், இந்திய ஆய்வியல் துறையின் கீழ் தமிழ்மொழி இளங்கலை பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. மொழியியல் புலத்தின் கீழ் இளங்கலை மொழியியல் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.