![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e8/Maraimalai_Adigal_2007_stamp_of_India.jpg/640px-Maraimalai_Adigal_2007_stamp_of_India.jpg&w=640&q=50)
மறைமலை அடிகள்
தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி / From Wikipedia, the free encyclopedia
மறைமலை அடிகள் (சூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாகத் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர்.
விரைவான உண்மைகள் மறைமலை அடிகள், பிறப்பு ...
மறைமலை அடிகள் | |
---|---|
![]() 2007 ஆம் ஆண்டு இந்தியாவின் முத்திரையில் மறைமலை அடிகள் | |
பிறப்பு | வேதாசலம் (1876-07-15)15 சூலை 1876 நாகப்பட்டினம், தஞ்சை மாவட்டம் (மதராசு பிரசிடென்சி), சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பு | 15 செப்டம்பர் 1950(1950-09-15) (அகவை 74) மதராசு, மதராசு மாநிலம், இந்தியா |
மூடு