மயிலிட்டி
இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள இடம் / From Wikipedia, the free encyclopedia
மயிலிட்டி (Myliddy) என்பது இலங்கையின் ஒரு சிறிய ஊர் ஆகும். இது இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. இதன் கிழக்கே பலாலி, வடக்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே தையிட்டி, தெற்கே கட்டுவன் ஆகியன இதன் எல்லைகளாக உள்ளன. இது யாழ்ப்பாணத்தின் முக்கியமான மீன்பிடிக் கிராமங்களில் ஒன்றாகும்.[1] இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடகரைப் பகுதியின் நடுவே அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், பலாலி விமானப்படைத்தளம் ஆகியன இதனருகில் அமைந்துள்ளதால் இக்கிராமம் 1990-ஆம் ஆண்டு முதல் அதி-உச்ச பாதுகாப்பு வலயமாக இருந்து வந்தது. 27 ஆண்டுகளின் பின்னர், 2017 மே 3 இல் இப்பகுதி அவ்வூர் மக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து விடப்பட்டது.[2][3] ஆனாலும், இவ்வூரின் அரைவாசிப் பகுதி தொடர்ந்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது.
மயிலிட்டி
Myliddy | |
---|---|
ஊர் | |
ஆள்கூறுகள்: 9°48′N 80°03′E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பிசெ பிரிவு | வலிகாமம் வடக்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம் ) |