மனித மரபணுத்தொகைத் திட்டம்
From Wikipedia, the free encyclopedia
மனிதன் மரபணுத்தொகைத் திட்டம் என்பது மனிதரின் மரபணுத்தொகையை முழுமையாகக் கண்டறிந்து ஆவணப்படுத்த முன்னெடுக்கப்பட்ட திட்டம் ஆகும். இந்த திட்டம் அமெரிக்காவின் தலைமையில் மேலும் ஐந்து நாடுகள் இணைந்து (சீனா, பிரான்ஸ், யேர்மனி, யப்பான், பிரித்தானியா) முன்னெடுக்கப்பட்டது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/08/Dna-split.png/150px-Dna-split.png)
மனித வரலாற்றில் இது ஒரு முக்கிய அறிவியல் தொழில்நுட்ப மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. மனிதரின் மரபகராதியை பிற உயிரின மரபகராதிகளுடன் ஒப்பிட்டு நடைபெற்ற ஆய்வுகள் படிவளர்ச்சிக் கொள்கையை ஆணித்தரமாக உறுதி செய்தது. மரபகராதி மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பாக்கப்படுகிறது. வரலாற்றில் முதல் முறையாக மனிதர் தமது மரபணுவை நுண்ணியமுறையில் மாற்றி அமைக்க இந்த திட்டம் வழியமைத்தது. எதிர்காலத்தில் மனிதர் திட்டமிட்டு தமது படிவளர்ச்சியை முன்னெடுக்க முடியும்.