![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/07/Ancient_India_-_ta.png/640px-Ancient_India_-_ta.png&w=640&q=50)
மத்சய நாடு
From Wikipedia, the free encyclopedia
மத்சய நாடு அல்லது விராட நாடு (Matsya) நாடு, கி மு ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியாவின் இருந்த 16 மகாஜனபத நாடுகளில் ஒன்றாக விளங்கியது என அங்குத்தர நிக்காய எனும் பௌத்த நூல் மூலம் அறியப்படுகிறது. [1][2] மத்ஸம் எனும் சமஸ்கிருத மொழிச் சொல்லிற்கு மீன் எனப் பொருள்படும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/07/Ancient_India_-_ta.png/640px-Ancient_India_-_ta.png)
பிந்தைய வேத கால நாடான மச்சய நாடு, தற்கால இராஜஸ்தானின் வடகிழக்கு பகுதிகளைக் கொண்டது.
இதன் மன்னர் விராடன் ஆவார். குருச்சேத்திரப் போரில் விராடனும், அவரது மகன் உத்தரனும் கலந்து கொண்டனர்.
பாலி மொழி இலக்கியங்களில் மச்சயர்கள் சூரசேன நாட்டினருடன் தொடர்புடையவர்கள் என அறிய முடிகிறது. மேற்கு மச்சய நாட்டின் பகுதி, சம்பல் ஆற்று மலைப்பகுதிகளைப் பகுதிகளைக் கொண்டது.