![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a9/Surrender_of_Porus_to_the_Emperor_Alexander.jpg/640px-Surrender_of_Porus_to_the_Emperor_Alexander.jpg&w=640&q=50)
போரஸ்
From Wikipedia, the free encyclopedia
போரஸ், பர்வதேசுவரர் அல்லது புருவேந்தன், புருசோத்தமன் (Porus), பண்டைய இந்தியாவின் பஞ்சாப் பகுதிகளை ஆண்டவர் ஆவார். மாமன்னர் யயாதியின் மகன் புருவின் வழித்தோன்றலான பௌரவ ( பாண்டவ மற்றும் கௌரவர்கள்) அரச மரபினர் ஆவார்.[1]இவருக்கு பிறகு இவரது மகன் மலயகேது அரசரானார். [2]
விரைவான உண்மைகள் போரஸ், பௌரவ மன்னர்கள் ...
போரஸ் | |
---|---|
மன்னர் போரஸ் | |
![]() அலெக்சாண்டரிடம் சரணடையும் போரஸ், ஓவியம் ஆண்டு, 1865 | |
பௌரவ மன்னர்கள் | |
ஆட்சி | கி மு 340–317 |
முன்னிருந்தவர் | பமினி |
பின்வந்தவர் | மலயகேது |
மரபு | பௌரவ அரசமரபு |
தந்தை | பமினி |
தாய் | அனுசுயா |
பிறப்பு | பஞ்சாப் |
இறப்பு | கி மு அண். 321 – அண். 315 பஞ்சாப் |
சமயம் | பிற்கால வேதகால சமயம் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4f/Porus%27s_elephant_cavalry%2C_Cosmographia_%281544%29.jpg/320px-Porus%27s_elephant_cavalry%2C_Cosmographia_%281544%29.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e3/Alexander_the_Great_%28356-23_BC%29_and_Porus_%28oil_on_canvas%29.jpg/640px-Alexander_the_Great_%28356-23_BC%29_and_Porus_%28oil_on_canvas%29.jpg)
ஜீலம் ஆற்றாங்கரையில் ஹைடஸ்பேஸ் என்ற இடத்தில், யானைப்படையையே பார்த்திராத அலெக்ஸாண்டரின் படைகள் முதல் முறையாக போரஸின் யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். பின்னர் கி.மு.326-ல் நடந்த போரசுக்கு எதிரான போர்களில் வெற்றி கொண்ட அலெக்சாண்டர் போரஸ்சின் வீரத்தை கண்டு வியந்து போரஸிடம் நட்பு பாராட்டி, தான் வென்ற பகுதிகளுக்கு போரஸ் மன்னரையே சத்ரபதியாக நியமித்து கௌரவித்தார்.