புல்-இ-தருந்தே அராமேயக் கல்வெட்டு
From Wikipedia, the free encyclopedia
அசோகரின் புல்-இ- தருந்தே அரேமேயப் பாறைக் கல்வெட்டு ( Pul-i-Darunteh Aramaic inscription) ஆப்கானித்தான் நாட்டின் லக்மான் மாகாணத்தில் புல்-இ- தருந்தே எனுமிடத்தில் பேரரசர் அசோகர் கிமு 260-ஆம் ஆண்டில் நிறுவிய அரமேய மொழியில் பொறித்த பாறைக் கல்வெட்டு ஆகும்.[1] இப்பாறைக் கல்வெட்டை 1969-இல் பெல்ஜியத்தின் மானிடவியல் அறிஞர்கள் ஆப்கானித்தானின் லக்மான் பிரதேசத்தில் தற்செயலாக கண்டுபிடித்தனர். 1973-ஆம் ஆண்டில் இதே பகுதியில் இக்கல்வெட்டின் பிற துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. [2]
விரைவான உண்மைகள் செய்பொருள், எழுத்து ...
அசோகரின் புல்-இ-தருந்தே அராமேயக் கல்வெட்டு | |
செய்பொருள் | இயற்கையான கல் |
---|---|
எழுத்து | அரமேயம் |
உருவாக்கம் | ஏறத்தாழ கிமு 260 |
காலம்/பண்பாடு | கிமு 3-ஆம் நூற்றாண்டு |
இடம் | புல்-இ- தருந்தே, லக்மான் மாகாணம், ஆப்கானித்தான் |
தற்போதைய இடம் | புல்-இ- தருந்தே, லக்மான் மாகாணம், ஆப்கானித்தான் |
மூடு
1935-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அசோகரின் இந்த அரமேய மொழிப் பாறைக் கல்வெட்டு, 1915-இல் ஜான் மார்ஷல் கண்டுபிடித்த அசோகரின் தட்சசீலம் கல்வெட்டு, அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள் மற்றும் அசோகரின் காந்தார அரமேயம் கல்வெட்டுகள் போன்றே உள்ளது.[2]