அசோகரின் தட்சசீலம் கல்வெட்டு
From Wikipedia, the free encyclopedia
அசோகரின் தட்சசீலம் அரமேய மொழிக் கல்வெட்டு (Aramaic Inscription of Taxila) தற்கால பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்த பண்டைய தட்சசீலம் நகரத்தின் அருகே சிர்காப் எனும் இடத்தில் உள்ளது. இக்கல்வெட்டை பேரரசர் அசோகர் கிமு 260-இல் நிறுவினார். எண்கோண வடிவிலான பளிங்குக் கல்லில் அரமேய மொழியில் இக்கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டை ஜான் மார்ஷல் எனும் பிரித்தானியத் தொல்பொருள் ஆய்வாளர் 1915-ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். இது அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுளில் ஒன்றாக உள்ளது.[1] .[2]
விரைவான உண்மைகள் செய்பொருள், எழுத்து ...
அசோகரின் அரமேய மொழி தட்சசீலம் கல்வெட்டு | |
செய்பொருள் | பளிங்குக் கல் |
---|---|
எழுத்து | அரமேயம் |
உருவாக்கம் | ஏறத்தாழ கிமு 260 |
காலம்/பண்பாடு | கிமு 3-ஆம் நூற்றாண்டு |
இடம் | சிர்காப், தட்சசீலம், பஞ்சாப், பாகிஸ்தான் |
தற்போதைய இடம் | தட்சசீலம் அருங்காட்சியகம், பாகிஸ்தான் |
மூடு