புற்றுநோய்
From Wikipedia, the free encyclopedia
புற்றுநோய் (cancer) என்பதுக் கேடுதரும் உடற்கட்டிகளால் ஏற்படும் பல நோய்களின் பொதுவான ஒரு பெயர் ஆகும். இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடற்று உயிரணுக்கள் பிரிந்து பெருகுவதால் இழையங்களில் ஏற்படும் மிகைப்பெருக்கம், அருகிலுள்ள இழையங்களினூடாக ஊடுருவி, ஏனைய உடற்பகுதிகளுக்கும் பரவும் ஆற்றலைக் கொண்டிருப்பின் அவை கேடுதரும் கட்டிகள் அல்லது புற்று நோய் எனப்படும்.[2][8] இவை உடலில் இருக்கும் இடத்தைப் பொறுத்து என்ன நோய் என்று பெயரிடப்படுகின்றது. கேடு விளைவிக்கா கட்டிகள் (en:benign tumor) உடலின் வேறு பாகங்களுக்குப் பரவுவதில்லை.[8]
இக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம்
கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும் |
புற்றுநோய் Cancer | |
---|---|
ஒத்தசொற்கள் | புற்றுத்திசுக் கட்டி, Malignant tumor, malignant neoplasm |
வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி ஒரு புற்றுத்திசு இடை தோலியப்புற்றைக் காட்டுகிறது. உரைக்கூற்று: → கட்டி ←, ✱ நடு புடைச்சவ்வு ஊறணி, 1 & 3 நுரையீரல்கள், 2 முள்ளந்தண்டு நிரல்கள்]], 4 விலா எலும்புகள், 5 பெருந்தமனி, 6 மண்ணீரல், 7 & 8 சிறுநீரகங்கள், 9 கல்லீரல் | |
சிறப்பு | புற்றுநோயியல் |
அறிகுறிகள் | கட்டி, அசாதாரண இரத்தப்போக்கு, நீடித்த இருமல், காரணமில்லா எடை இழப்பு, மலம் கழித்தல்களில் மாற்றம்[1] |
சூழிடர் காரணிகள் | புகையிலை, உடற் பருமன், மோசமான உணவுப் பழக்கம், அமர்ந்தியங்கும் வாழ்முறை, அதிகமான மதுபானம், சில நோய்த்தொற்றுகள்[2][3] |
சிகிச்சை | கதிர் மருத்துவம், அறுவை சிகிச்சை, வேதிச்சிகிச்சை, இலக்கு சிகிச்சை.[2][4] |
முன்கணிப்பு | சராசரி ஐந்தாண்டுகள் உயிர்வாழ்வு 66% (அமெரிக்கா)[5] |
நிகழும் வீதம் | 90.5 மில். (2015)[6] |
இறப்புகள் | 8.8 மில். (2015)[7] |
உடலானது பல வகைபட்ட உயிரணுக்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள உயிரணுக்கள் பிரிந்து, வளர்ந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு உயிரணுக்களைப் புதிதாக உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த உயிரணுக்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான உயிரணுக்கள், கழலை அல்லது கட்டி எனப்படும் இழையங்களின் கூட்டை ஏற்படுத்துகிறது. தீங்கில்லா கட்டிகளைப் பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, அவை மீண்டும் தோன்றுவது இல்லை. குருதிப் புற்றுநோய் தவிர்ந்த ஏனைய புற்று நோய்களில் பொதுவாகக் கட்டிகள் தோன்றும்.
முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்று நோய் உயிரணுக்களின் பரவல் குருதிச் சுற்றோட்டத்தொகுதி வழியாகவோ அல்லது நிணநீர்த் தொகுதி (en:Lymphatic system) வழியாகவோ பரவக்கூடும். தமனி, சிரை, நுந்துளைக்குழாய்கள் மூலம் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. இந்தக் குருதியானது புற்று நோய் உயிரணுக்களை உடலின் ஏனைய பகுதிகளுக்குக் கொஉ செல்லக் கூடும். அதேபோல், நிணநீர்த் தொகுதியில், நிணநீர்க் குழியங்கள் (அதாவது நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கெடுக்கும் வெள்ளை அணுக்கள், நிணநீர்க் குழாய்கள் (en:Lymphatic vessels) மூலமாகக நிணநீர்க்கணுக்களுக்குப் புற்று நொய் உயிரணுக்களை எடுத்துச் செல்லக் கூடும். இவ்வாறு கேடு விளைவிக்கும் கட்டிகளில் உள்ள உயிரணுக்கள், முதலில் அருகிலுள்ள இழையங்களுக்குள் ஊடுருவிச் சென்று பின்னர் குருதி அல்லது நிணநீர் ஊடாக உடலின் ஏனைய பகுதிகளுக்குப் பரவுதலை மாற்றிடம் புகல் (metastasis) என்பர். இதனால் புற்று நோய் ஏனைய பகுதிகளிலும் தோன்றும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
புகையிலைப் பாவனை 22% மான புற்று நோய் இறப்புகளுக்குக் காரணமாகின்றது.[2] இன்னுமொரு 10% இறப்புக்கு உடற் பருமன், திட்ட உணவு இல்லாமை. போதியளவு உடற் பயிற்சி இல்லாமை, அளவுக்கதிகமான மது பாவனை போன்றன காரணமாகின்றன.[2][9][10] ஏனைய காரணிகளாக சில நோய்த்தொற்றுக்கள், அயனியாக்கும் கதிர், சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்குக் காரணமான நச்சுப் பொருட்கள் இருக்கின்றன.[3] வளர்ந்துவரும் நாடுகளில், 15% மான புற்று நோய்க்குக் காரணமாக, அல்லது புற்று நோயைத் தூண்டக்கூடிய காரணியாக மனித சடைப்புத்துத் தீ நுண்மம், en:Epstein–Barr virus, எச்.ஐ.வி, ஈரல் அழற்சி பி, ஈரல் அழற்சி சி (en:Hepatitis C, எலிக்கோபேக்டர் பைலோரி என்னும் பக்டீரியா போன்றன காணப்படுகின்றன.[2] இந்தக் காரணிகள் யாவும், பகுதியாகவேனும், உயிரணுக்களிலிருக்கும் மரபணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.[11] புற்று நோய் ஆரம்பிப்பதற்குப் பல மரபணுப் பிறழ்வுகள் நடைபெற வேண்டும்.[11] கிட்டத்தட்ட 5–10% மான புற்று நோய்கள், பாரம்பரியமாக பெற்றோர்களிடம் இருந்து பெறப்படும் இயல்பிலிருந்து மாறுபட்ட மரபணுக்களில் இருந்து வருபவையாக இருக்கின்றன.[12] உயிரணு பிரிதலை கட்டுப்படுத்தும் புரதங்களில் (எ.கா.en:Retinoblastoma protein) அல்லது புற்று நோய் வரமால் அடக்கி வைக்கும் மரபணுக்களில் (en:Tumor suppressor (எ.கா.en:p53) ஏற்படும் இழப்புகள் அல்லது பிறழ்வுகளினால், அவற்றின் தொழிற்பாடு இல்லாமல் போய் அல்லது குறைந்து, உயிரணு பிரிதல் கட்டுப்பாட்டை இழந்து, அல்லது ஒருங்கமைவுகள் (regulation) இல்லாமல், உயிரணுப் பெருக்கம் அடைந்து (proliferation) புற்று நோய் உருவாகிறது. சில சமயம் புற்றுநோயை உருவாக்கும் ஆற்றல் கொண்ட மரபணுக்களில் (en:Oncogene ஏற்படும் பிறழ்வுகள், அவற்றின் செயற்பாட்டை அதிகரிப்பதனாலும் உயிரணு பிரிதல் கட்டுப்பாட்டை இழந்து, அல்லது ஒருங்கமைவுகள் (regulation) இல்லாமல், உயிரணுப் பெருக்கம் அடைந்து (proliferation) புற்று நோய் உருவாகிறது.[13]
இவ்வாறு உருவாகும் புற்று நோய் உடலில் ஏனைய பகுதிகளுக்கு மாற்றிடம் புகல் மூலம் பரவுகையில், பல சமயங்களில் நிவாரணம் செய்யமுடியாத நிலைக்குச் செல்கின்றது. அண்மைய ஆய்வுகள் குறு ஆர்.என்.ஏக்களில் ஏற்படும் மாற்றங்களினாலும் புற்று நோய் தூண்டுப்படுவதாக உறுதி செய்துள்ளன. மேலும் புற்று உயிரணுக்களில் மிக குறைந்த அளவுகளில் புற்று குருத்தணுக்களை (en:Cancer stem cell) அண்மையில் கண்டறிந்துள்ளார்கள். இவை அந்தந்த உறுப்புகளில் நிலவும் சாதாரண குருத்தணுக்களின் (normal stem cells, ex. neuronal stem cells) சமிக்ஞை தடவழிகளில் (cell signaling pathway) பிறழ்வுகள் ஏற்படுவதனால், புற்றுக் குருத்தணுக்களைத் தோற்றுவிக்கின்றன.
புற்று நோயானது சில உணர்குறிகள், மற்றும் அறிகுறிகள் மூலமும், திறத் தணிக்கைச் சோதனைகள் (screening) மூலமும் பொதுவாக கண்டறியப்படுகின்றன.[2] அதன் பின்னர், பல மருத்துவப் படிமவியல் போன்ற சில மருத்துவப் பரிசோதனைகள் மூலம் ஆராயப்பட்டு, உயிரகச்செதுக்கு பெறப்பட்டு உறுதி செய்யப்படும்.[14] பொதுவான அறிகுறிகளும், உணர்குறிகளும் கட்டி, அசாதரண குருதிப்பெருக்கு, தொடர்ந்த நீண்ட கால இருமல், காரணம் தெரியாமல் உடல்நிறை வீழ்ச்சி ஏற்படுதல், மலம் கழித்தலில் ஏற்படும் சிக்கல்கள் போன்றன ஆகும்.[1] மனிதரில் 100 க்கும் மேற்பட்ட புற்று நோய்கள் அறியப்பட்டுள்ளன.[8] ஒவ்வொருவகைப் புற்று நோய்க்குமான காரணிகள் வேறுபடும்.[1]
புற்று நோயைத் தடுப்பதில் புகை பிடித்தல் செய்யாமல் இருத்தல், அளவான உடல்நிறையைப் பேணல், அளவுக்கதிகமாக மதுசாரம் பயன்படுத்தாமை, அதிகளவில் காய்கறிகள், பழங்கள், முழுமையான தானியங்கள் (en:Whole grain) போன்றவற்றை உண்ணுதல், அளவுக்கதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், மற்றும் சிவப்பு இறைச்சி போன்றவற்றை உண்ணுவதைத் தவிர்த்தல், சூரிய ஒளிக்கு அளவுக்கதிகமாக வெளிப்படுத்தப்படாமல் இருத்தல், சில தொற்றுநோய்களுக்கு எதிராக தடுப்பு மருந்தேற்றம் செய்துகொள்ளல் போன்றன முக்கிய பங்கு வகிக்கின்றன.[15][16] கருப்பப்பை வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய் போன்றவற்றை திறத் தணிக்கைச் சோதனைகள் மூலம் ஆரம்ப நிலையில் கண்டறிவதால் நோயிலிருந்து மீள்வது இலகுவாக இருக்கும்.[17] மார்பகப் புற்றுநோயைத் திறத் தணிக்கைச் சோதனை மூலம் கண்டறிவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.[17][18]
புற்று நோய்க்கான சிகிச்சைகளாக, பொதுவாக, கதிர் சிகிச்சை, வேதிச்சிகிச்சை, அறுவைச் சிகிச்சை, இலக்குச் சிகிச்சை (en:Targeted therapy) போன்றவற்றின் இணைந்த சிகிச்சை முறை வழங்கப்படுகின்றது.[2][4] வலி மற்றும் அறிகுறிகளை அவதானித்து, அதற்கேற்ப நடைமுறையைப் பேணல் மிகவும் அவசியமாகின்றது.[2] மிகவும் முற்றிய நிலையில் நோயைக் இருப்பவர்களில், மரணவலி தணிப்புச் சிகிச்சை மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.[2] புற்று நோயைக் கண்டறிந்த பின்னர் ஒருவர் உயிர் பிழைப்பது, என்ன வகைப் புற்று நோய் என்பதிலும், அதனைக் கண்டறியும்போது என்ன நிலையில் அவரது நோய் நிலை இருந்தது என்பதிலும் தங்கியிருக்கும்.[11] 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏற்படும் புற்று நோய்க்கு வளர்ந்த நாடுகளில் 5 ஆண்டுகால பிழைத்திருக்கும் தன்மை 80% மாக உள்ளது.[19] அமெரிக்காவில் 5 ஆண்டு பிழைத்திருக்கும் வாய்ப்பு 66% மாக உள்ளது.[5] புற்று நோய்க்கு எதிராக நாம் உட்கொள்ளும் மருந்துகள் புற்று உயிரணுக்களைத் தாக்கி அழிக்கும்போது, சாதாரண உயிரணுக்களையும் தாக்கும் தன்மை கொண்டதாக இருக்கின்றன. எனவே சாதாரண உயிரணுக்களைப் பாதுகாக்கும் வண்ணம் மருந்துகள் அமைய ஆய்வுகள் தொடர்கின்றன.
புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.[20] புற்றுநோய் காரணமாக சுமார் 13% மனித இன இழப்பு ஏற்பட்டு வருகிறது.[21] அமெரிக்க புற்று நோய்ச் சமூகம் நடத்திய கணிப்பின்படி, உலகில் 7.6 மில்லியன் மக்கள் புற்றுநோய் காரணமாக 2007 ஆண்டில் உயிர் இழந்தனர்.[22] 2015 ஆம் ஆண்டில் உலகில் 90.5 மில்லியன் மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டனர்.[6] ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 14.1 மில்லியன் மக்கள் இந் நோயால் (கரும்புற்றுநோய் தவிர்ந்த ஆனைய தோல் புற்றுநோய்களைச் சேர்க்காமல்) தாக்கப்படுகின்றனர்.[11] இவற்றில், 8.8 மில்லியன் இறப்புக்களை இந் நோய் தருகின்றது[7] மிகப் பொதுவான புற்று நோய் வகைகள் நுரையீரல் புற்றுநோய், முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய், வயிற்றுப் புற்றுநோய் (இரைப்பைப் புற்றுநோய்) ஆகியனவாகும்.[23] பெண்களில் மார்பகப் புற்றுநோய், கருப்பப்பை வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய், நுரையீரல் புற்றுநோய் ஆகியனவாகும்.[11] பொதுவாக குழந்தைகளில் கடும் நிணநீர்க் குழியப் புற்றுநோய், மூளைக் கட்டி போன்றவை அதிகமாக இருப்பினும், ஆப்பிரிக்காவில் உள்ள குழந்தைகளில் en:Non-Hodgkin lymphoma அதிகளவில் இருக்கின்றன.[19] 2012 ஆம் ஆண்டில், 165,000 எண்ணிக்கையான 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டனர்.[23] வளர்ந்து வரும் நாடுகளில் புற்று நோய் அதிகளவில் தோன்றுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.[11]
புற்றுநோய் எல்லா விலங்குகளையும் தாக்கக்கூடியது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும். மருத்துவ முறைகளில் புற்றுநோயைப்பற்றி படித்தல், கண்டறிதல், சிகிச்சை அளித்தல், புற்றுநோயைத்தடுத்தல் அனைத்தும் அடங்கிய மருத்துவப்பிரிவு புற்றுநோயியல் என்று அழைக்கப்படுகிறது.