மரபு
From Wikipedia, the free encyclopedia
மரபு அல்லது வழக்கம்(usual)எனப்படுவது பெற்றோர்கள் அல்லது முன்னோர்களிலிருந்து, சந்ததிகளுக்கு இயல்புகள் கடத்தப்படும் செயல்முறையாகும். சந்ததியின் உயிரணு அல்லது உயிரினம் உருவாகும்போதே, பெற்றோர் உயிரணு அல்லது உயிரினத்தில் இருந்து இயல்புகளைப் பெற்றுக் கொள்வது இந்த செயல் முறையினாலேயே ஆகும்.[1] இந்த பாரம்பரிய செயல்முறையின்போது, இயற்கையாகவும், சூழல் தாக்கத்தினாலும் உயிரினங்களில் வேறுபாடுகளும் தோன்றுவதனால், அவற்றில் புதிய இயல்புகள் உருவாகி புதிய இனங்களும் தோன்றும்.
உயிரியலில் பாரம்பரியம் பற்றிய கல்வி மரபியல் எனப்படும்.