![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2b/Saints_Francisco_and_Jacinta_Marto_double_portrait.jpg/640px-Saints_Francisco_and_Jacinta_Marto_double_portrait.jpg&w=640&q=50)
பிரான்சிஸ்கோ மற்றும் ஜெசிந்தா மார்த்தோ
From Wikipedia, the free encyclopedia
புனிதர்கள் பிரான்சிஸ்கோ தெ ஜீசஸ் மார்த்தோ (11 ஜூன், 1908 – 4 ஏப்ரல், 1919), அவரது சகோதரி ஜெசிந்தா தெ ஜீசஸ் மார்த்தோ (11 மார்ச், 1910 – 20 பெப்ரவரி, 1920) ஆகியோர் போர்த்துகல் நாட்டின் பாத்திமா நகருக்கு அருகிலுள்ள அல்ஜுஸ்ட்ரெல் குக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள். 1916ஆம் ஆண்டு, கோவா டா இரியா பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வேளையில், அமைதியின் வானதூதரையும், 1917ஆம் ஆண்டு இயேசுவின் தாயான கன்னி மரியாவையும் காட்சிகளில் கண்டனர். இந்த குழந்தைகளுக்கு அன்னை மரியா வழங்கிய முன்னறிவிப்புகள் அனைத்தும் நிறைவேறியதால், பாத்திமா அன்னை பேராலயம் உலக மக்களை ஈர்க்கும் திருத்தலமாக விளங்குகிறது. இந்த இருவருக்கும், 2017 மே 13ந்தேதி, பாத்திமாவில் உள்ள செபமாலை அன்னை பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிசு புனிதர் பட்டம் வழங்கினார்.
- இது ஒரு போர்த்துக்கேய பெயராகும்; இதில் குடும்ப பெயர் தெ ஜீசஸ் நபரின் பெயர் மார்த்தோ ஆகும்.
விரைவான உண்மைகள் புனிதர்கள்பிரான்சிஸ்கோ மற்றும் ஜெசிந்தா மார்த்தோ, பிறப்பு ...
புனிதர்கள் பிரான்சிஸ்கோ மற்றும் ஜெசிந்தா மார்த்தோ | |
---|---|
![]() பிரான்சிஸ்கோ மற்றும் ஜெசிந்தாவின் ஒளிப்படம் | |
பிறப்பு | 11 ஜூன் 1908 (பிரான்சிஸ்கோ) 11 மார்ச் 1910 (ஜெசிந்தா) அல்ஜுஸ்ட்ரெல், பாத்திமா, போர்த்துகல் |
இறப்பு | 4 ஏப்ரல் 1919(1919-04-04) (அகவை 10) அல்ஜுஸ்ட்ரெல், பாத்திமா, போர்த்துகல் (பிரான்சிஸ்கோ) 20 பெப்ரவரி 1920(1920-02-20) (அகவை 9) லிஸ்பன், போர்த்துகல் (ஜெசிந்தா) |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | 13 மே 2000, செபமாலை அன்னை பேராலயம், பாத்திமா, போர்த்துகல் by திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் |
புனிதர் பட்டம் | 13 மே 2017, செபமாலை அன்னை பேராலயம், பாத்திமா, போர்த்துகல் by திருத்தந்தை பிரான்சிசு |
முக்கிய திருத்தலங்கள் | செபமாலை அன்னை பேராலயம், பாத்திமா, போர்த்துகல் |
திருவிழா | 20 February |
பாதுகாவல் |
|
மூடு