![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e4/Streptococcus_pyogenes.jpg/640px-Streptococcus_pyogenes.jpg&w=640&q=50)
பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள்
From Wikipedia, the free encyclopedia
பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள் அல்லது பிரசவத்தின் விளைவான காய்ச்சல் அல்லது குழந்தைப்பிறப்பின் பின்னரான நோய்த்தொற்றுக்கள் எனப்படுவது குழந்தைப்பிறப்பு அல்லது கருச்சிதைவைத் தொடர்ந்து பெண்ணின் இனப்பெருக்கப் பாதையில், எந்த ஒரு நுண்ணுயிரியினாலும் ஏற்படக்கூடிய நோய்த்தொற்று ஆகும்[1]. அறிகுறி்கள் மற்றும் நோய்க்குறிகளில் வழக்கமாக 38.0 °C (100.4 °F) -ஐ விட அதிகமான ஒரு காய்ச்சல், குளிர்நடுக்கங்கள், அடி வயிற்றில் வலி, யோனியிலிருந்து வெளியேறும் பொருளின் ஏற்படக்கூடிய துர்நாற்றம் ஆகியவை அடங்கும்.[1] பிரசவத்தைத் தொடர்ந்து வழக்கமாக முதல் 24 மணிநேரத்துக்குப் பிறகு அடுத்து வரும் முதல் பத்து நாட்களுக்குள் ஏற்படக்கூடிய தொற்றுக்களே பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள் எனப்படுகின்றன.[3]
பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள் | |
---|---|
ஒத்தசொற்கள் | குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகள், தாய்க்கு வரும் நோய்த்தொற்று |
![]() | |
பிரசவத்தின் பின்னரான தீவிரமான காய்ச்சலின் பல வகைகளுக்கு ஸ்ட்ரெப்டோகோக்கஸ் பையோஜென்கள் (Streptococcus pyogenes) (சிவப்புச் சாயமேற்றம் பெறும் கோளங்கள்) காரணமாக உள்ளது. (900x உருப்பெருக்கம்) | |
சிறப்பு | மகப்பேறியல் |
அறிகுறிகள் | காய்ச்சல், கீழ் வயிற்று வலி, யோனியிலிருந்து வெளியேறும் திரவத்தின் துர்நாற்றம்[1] |
காரணங்கள் | பல்வேறுபட்ட பாக்டீரியாக்கள்[1] |
சூழிடர் காரணிகள் | அறுவைச் சிகிச்சையில் மூலம் குழந்தை பிறப்பு, குழந்தை பிறப்பிற்கு முன்னதாகவே மென்சவ்வுகள் கிழிந்துபோதல், மிக நீண்ட (24 மணித்தியாலங்களுக்கு மேலான) குழந்தைபிறப்புக் காலம்[1][2] |
சிகிச்சை | நுண்ணுயிர் எதிர்ப்பிகள்[1] |
பிரசவத்தைத் தொடர்ந்து, பெண் இனப்பெருக்கத் தொகுதியின் பகுதிகள் வெறுமையாகி விடுவதனால், அது தொற்றுக்கள் ஏற்படுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கின்றது. இந்த வகை நோய்த்தொற்றானது கருப்பையின் குழி மற்றும் சுவர்களுடன் நின்று விடலாம். குழந்தை பிறப்புக்கான நேரம் மிக நீண்டதாக இருந்தாலோ, அல்லது அளவுக்கதிகமான தீவிர குருதிப்பெருக்கு இருந்தாலோ, தொற்றானது வேறு இடங்களுக்கும் பரவி, குருதி நச்சேற்றம் (Sepsis - blood poisoning]] அல்லது வேறு நோய் நிலைகள் தோன்றலாம்.
பிரசவத்துக்குப் பிந்தைய தொற்றுக்களுக்கான நோய்க்காரணியாக, குறிப்பிட்ட சில பாக்டீரியாக்களே முக்கியமாகக் காணப்படுகின்றன.[1] பிரசவத்தைத் தொடர்ந்து ஏற்படும் காய்ச்சலுக்கான வேறு காரணங்கள்: மார்பகத்தில் பால் கட்டிக்கொண்டு வீக்கம் ஏற்படுதல், சிறுநீர்ப்பாதைத் தொற்றுகள், வயிற்றில் அறுவை மேற்கொள்ளப்பட்ட இடத்தில் தொற்றுகள், பெண்ணுறுப்பின் வெட்டுத் திறப்பு (en:Episiotomy, நுரையீரல் விரியாமை (en:Atelectasis) ஆகியவை. ஆகும்[1]