![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f3/The_Chief_Minister_of_Karnataka%252C_Shri_B.S._Yediyurappa.jpg/640px-The_Chief_Minister_of_Karnataka%252C_Shri_B.S._Yediyurappa.jpg&w=640&q=50)
பி. எஸ். எடியூரப்பா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
போக்கனக்கெரெ சித்தலிங்கப்பா யெதியூரப்பா (கன்னடம்: ಬೋಕನಕೆರೆ ಸಿದ್ಧಲಿಂಗಪ್ಪ ಯಡಿಯೂರಪ್ಪ, பி. பெப்ரவரி 27, 1943) ஓர் இந்திய அரசியல்வாதியும், கருநாடகத்தின் முதலமைச்சராக பொறுப்பில் இருந்தவரும் ஆவார். மே 30, 2008 அன்று கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பதவியில் ஏறினார். இவரே தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க முதலமைச்சர் ஆவார்[1].இவர் லிங்க பனாஜிகா சமூகத்தில் பிறந்தவர் [2][3][4]. முன்னதாக நவம்பர் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் நாள் ஜனதா தளம் (மதசார்பற்ற) கட்சியுடனான கூட்டணி அரசு கவிழும் முன்பு சிறிது காலம் (7 நாட்கள்) முதலமைச்சராகப் பணியாற்றினார்.[5]
பி. எஸ். யெதியூரப்பா | |
---|---|
![]() பி. எஸ். யெதியூரப்பா | |
25ஆவது கர்நாடகாவின் முதலமைச்சர் | |
பதவியில் 17 மே 2018 – 19 மே 2018 | |
ஆளுநர் | வாஜ்பாய் வாலா |
முன்னையவர் | சித்தராமையா |
பின்னவர் | எச். டி. குமாரசாமி |
பதவியில் மே 30, 2008 – சூலை 31,2011 | |
முன்னையவர் | குடியரசுத்தலைவர் ஆட்சி |
பின்னவர் | டி. வி. சதானந்த கௌடா |
தொகுதி | ஷிக்கரிப்பூர் |
பதவியில் நவம்பர் 12, 2007 – நவம்பர் 19, 2007 | |
முன்னையவர் | எச். டி. குமாரசாமி |
பின்னவர் | குடியரசுத்தலைவர் ஆட்சி |
தொகுதி | ஷிக்கரிப்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 27 பெப்ரவரி 1943 (1943-02-27) (அகவை 81) போக்கனக்கெரெ, மாண்டியா மாவட்டம், கருநாடகம் இந்தியா ![]() |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாஜக |
துணைவர் | மைத்திரதேவி |
பிள்ளைகள் | இரண்டு பிள்ளைகள், மூன்று பெண்கள் |
வாழிடம் | பெங்களூர் |
As of மே 28, 2008 மூலம்: |
இவர்மீது இரு நில ஊழல் வழக்குகளை கர்நாடகத்தின் மக்கள் குறைகேட்பு ஆணையம் (லோக் ஆயுக்தா) பதிவு செய்தநிலையில் சூலை 31, 2011 அன்று தமது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இவ்வழக்குகளை விசாரிக்க மாநில ஆளுனர் அனுமதி வழங்கியதை அடுத்து லோக் ஆயுக்தா நீதிமன்றம் இவரைக் கைது செய்ய உத்தரவிட்டது. இவரது முன்பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் 15 அக்டோபர் 15, 2011 அன்று சரணடைந்த யெதியூரப்பா அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.[6]
2013 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியுடனான கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கினார். அந்த ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட கர்நாடக ஜனதா கட்சி 10 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றது. மக்களிடையே வரவேற்பு கிடைக்காததால் தனது கட்சியை பாரதீய ஜனதா கட்சியுடன் இணைத்தார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினரானார். 2016 ஆம் ஆண்டு கர்நாடக பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் 104 இடங்களைப் பெற்ற பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி அழைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். 2018 மே மாதத்தில் மூன்றாவது முறையாக முதல் அமைச்சராகப் பதவி ஏற்றார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஆட்சி ஏற்ற 3 ஆம் நாளில் பதவியிலிருந்து விலகினார்.[7]