பார்டர்-கவாஸ்கர் கிண்ணம்
From Wikipedia, the free encyclopedia
பார்டர்-கவாஸ்கர் கிண்ணம் (Border-Gavaskar Trophy) என்பது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே விளையாடப்படும் தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் ஆகும். இது ஐசிசியின் எதிர்கால சுற்றுப்பயண திட்டம் மூலம் பல்வேறு காலக்கட்டங்களில் நடைபெற்று வருகிறது. ஒருவேளை தொடர் முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்தால், முன்பு கிண்ணத்தை வைத்திருக்கும் அணி அதைத் தக்கவைத்துக் கொள்ளும்.
விரைவான உண்மைகள் நாடு(கள்), நிர்வாகி(கள்) ...
![]() பார்டர்-கவாஸ்கர் கோப்பை | |
நாடு(கள்) | ![]() ![]() |
---|---|
நிர்வாகி(கள்) | சிஏ பிசிசிஐ |
வடிவம் | தேர்வுத் துடுப்பாட்டம் |
முதல் பதிப்பு | ஆத்திரேலியா 1996–97 (இந்தியா) [1] |
கடைசிப் பதிப்பு | 2023 (இந்தியா) |
அடுத்த பதிப்பு | 2024-25 |
போட்டித் தொடர் வடிவம் | தேர்வு தொடர் |
மொத்த அணிகள் | 2 |
தற்போது கோப்பையை வைத்திருப்பவர் | ![]() |
அதிகமுறை வெற்றிகள் | ![]() |
அதிகபட்ச ஓட்டங்கள் | ![]() |
அதிகபட்ச வீழ்த்தல்கள் | ![]() |
மூடு
இந்த தொடருக்கு ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் மற்றும் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. இருவரும் தங்கள் துடுப்பாட்ட வாழ்க்கையில் 10,000 தேர்வுத் துடுப்பாட்ட ஓட்டங்களை அடித்த முதல் 2 தேர்வுத் துடுப்பாட்ட வீரர்கள் ஆவர். அந்தந்த அணிகளின் முன்னாள் அணித் தலைவர்களான இருவரும் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்து உலக சாதனை படைத்தவர்கள் ஆவர்.