பாரதிய ஜனதா கட்சி
இந்திய அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
பாரதிய சனதா கட்சி (மொழிபெயர்ப்பு: இந்திய மக்கள் கட்சி; சுருக்கமாக பா. ச. க) இந்திய அரசியலின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கட்சி, நாடாளுமன்றத்திலும், பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் முதலாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது. இதை பாரதிய சனதா கட்சி அல்லது சுருக்கமாக பாசக என்றும் அழைப்பார்கள்.
பாரதிய ஜனதா கட்சி भारतीय जनता पार्टी | |
---|---|
தலைவர் | ஜெகத் பிரகாஷ் நட்டா |
மக்களவைத் தலைவர் | நரேந்திர மோதி (பிரதமர்) |
மாநிலங்களவைத் தலைவர் | பியூஷ் கோயல் |
தொடக்கம் | 6 ஏப்ரல் 1980 |
தலைமையகம் | 11, அசோகா சாலை, புது தில்லி, 110001 |
இளைஞர் அமைப்பு | யுவ மோர்ச்சா |
பெண்கள் அமைப்பு | மகிளா மோர்ச்சா |
கொள்கை | ஒருங்கிணைந்த மனிதநேயம் (அதிகாரப்பூர்வ), இந்துத்துவம், தேசியவாதம், வலது சாரி அரசியல், பழைமைவாதம், தாராளமய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை[1][2][3] |
நிறங்கள் | காவி மற்றும் பச்சை |
இ.தே.ஆ நிலை | தேசிய கட்சி |
கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 240 / 545 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 83 / 245 |
இணையதளம் | |
http://bjp.org | |
இந்தியா அரசியல் |
பாரதிய சனதா கட்சி, தீனதயாள் உபாத்தியாயாவால் 1965 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு புத்தகத்தின் அடிப்படையில், ஒருங்கிணைந்த மனிதநேயம் [4] என்ற தத்துவத்தை தனது அதிகாரப்பூர்வ கொள்கையாகக் கொண்டுள்ளது. "இந்து தேசியவாதக் கட்சி" என்று கூறப்படும் இக்கட்சி, சுதேசி இயக்கத்தால் சுட்டிக்காட்டப்பட்ட சுயச் சார்புக் கொள்கையும், தேசியவாதக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையையும் கொண்டது. இந்திய அரசியலில் வலதுசாரிக் கொள்கையுடைய கட்சிகளில் இதுவும் ஒன்று.
பா.ச.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி, அடல் பிகாரி வாச்சுபாயைப் பிரதமராகக் கொண்டு 1998 முதல் 2004 வரை இந்தியாவை ஆண்டது. காங்கிரசு அல்லாத ஒரு அரசு தனது முழு ஐந்து வருட காலத்தையும் பூர்த்தி செய்தது அதுவே முதல் முறையாகும். 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பா.ச.க நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கியது. 2014 மக்களவை தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோதி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலிலும் பெரும்பான்மையைப் பெற்று தொடர்ந்து இரண்டுமுறை ஆட்சி அமைத்த காங்கிரசு அல்லாத முதல் கட்சி ஆனது.