![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0e/Bharathapuzha_from_Shoranur_bridge.jpg/640px-Bharathapuzha_from_Shoranur_bridge.jpg&w=640&q=50)
பாரதப்புழா
இந்தியாவிலுள்ள ஆறு / From Wikipedia, the free encyclopedia
பாரதப்புழா (ഭാരതപ്പുഴ) தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள முதன்மையான ஆறுகளுள் ஒன்று. மலையாள மொழியில் புழா என்ற சொல் ஆற்றை குறிக்கிறது. இது மாநிலத்தின் இரண்டாவது பெரிய[1] ஆறு. இந்த ஆறு நிளா என்றும் அழைக்கப்படுகிறது. கேரள மாநிலத்தின் வழியாக செல்லும் ஆறுகளில் மிக நீளமானது பாரதப்புழா தான் என்றாலும், முழுவதும் கேரள மாநிலத்திலேயே ஓடும் பெரியாற்றையே கேரளத்தின் நீளமான ஆறாக கருதுகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி இலட்சத்தீவுக் கடலில் கலந்துவிடும் பாரதப்புழா 209 கி.மீ. தூரத்தை கடக்கிறது. பாரதப்புழா சாதாரண ஒரு ஆறு மட்டுமல்ல, கேரளாவின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகும். நிளா ஆற்றங்கரை அதன் இயற்கை எழிலுக்கு மிகவும் பிரபலமானது. அதிகப்படியான மணல் அள்ளுதல் இந்த ஆற்றை முற்றிலுமாக அழித்து, நீர்போக்குவரத்துக்கு தகுதியற்றதாகவும் மாற்றி விட்டது. நிளாவின் இருப்பு மலையாள இலக்கியத்திலும் பல மலையாளிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆறுக்கு தூய திராவிடப் பெயர்களான பேராறு, கோரயாறு, வரட்டாறு, வாளையாறு என்றும், வடமொழியில் பாரதப்புழா, நிளா, காயத்திரி, மங்களநதி ஆகிய பெயர்களும் உள்ளன.
பாரதப்புழா | |
---|---|
![]() ஷொர்ணூர் பாலத்தில் இருந்து | |
பாரதப்புழையின் ஓட்டத்தை காட்டும் வரைபடம் | |
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | ஆனைமலை |
⁃ அமைவு | தமிழ் நாடு, இந்தியா |
⁃ ஆள்கூறுகள் | 10°36′N 77°07′E |
⁃ ஏற்றம் | 2461 மீ. |
முகத்துவாரம் | இலட்சத்தீவுக் கடல் |
⁃ அமைவு | பொன்னானி |
⁃ ஆள்கூறுகள் | 10°47′23.89″N 75°55′17.42″E |
நீளம் | 209 கி.மீ. (130 மைல்) |
வடிநில அளவு | 6,186 கி.மீ.² |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | பொன்னானி |
⁃ சராசரி | 161161 மீ³/நொ. |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | தூதப்புழா, காயத்ரிப்புழா, கல்பாத்திப்புழா, கண்ணாடிப்புழா |