பாமியான் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
பாமியான் மாகாணம் (Bamyan Province; பாரசீகம் بامیان) என்பது முப்பத்து நான்கு ஆப்கானிஸ்தானின் மாகாணங்களில் ஒன்று. இது நாட்டின் மத்தியில் உயரமான நிலப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உயர்ந்த மலைகளும் நடுத்தர அளவுமலைகளையும் கொண்டதாக உள்ளது. இந்த மாகாணம் ஆறு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் தலை நகராக பாமியான் நகரம் உள்ளது. மாகாணத்தின் மக்கள் தொகை 425,500 ஆகும்.[1] இதுவே ஆப்கானிஸ்தானின் ஹஜாராஜத் வட்டாரத்தில் பெரிய மாகாணமாகும். மேலும் இது கசாரா மக்களின் கலாச்சார தலைநகராகவும் விளங்குகிறது.
பாமியான் மாகாணம்
بامیان | |
---|---|
ஆப்கானிஸ்தானில் பாமியான் மாகாணத்தின் இடம் | |
நாடு | ஆப்கானித்தான் |
தலை நகரம் | பாமியான் |
அரசு | |
• ஆளுநர் | ஹபீபா சராபி |
பரப்பளவு | |
• மொத்தம் | 14,175 km2 (5,473 sq mi) |
மக்கள்தொகை (2013)[1] | |
• மொத்தம் | 4,25,500 |
• அடர்த்தி | 30/km2 (78/sq mi) |
நேர வலயம் | UTC+4:30 |
ஐஎசுஓ 3166 குறியீடு | AF-BAM |
முதன்மை மொழிகள் | பாரசீகம் |
இதன் பெயர் "ஒளி வீசும் இடம்" என மொழிபெயர்க்கப்படுகிறது. பண்டைக் காலத்தில், நடு ஆப்கானிஸ்தான் பகுதி பட்டுப் பாதையின் ஒரு பகுதியாக இருந்தது. உரோமப் பேரரசு, சீனா, நடு ஆசியா மற்றும் தெற்கு ஆசியா ஆகியவற்றுக்கு இடையிலான பாதைகள் சந்திக்கும் இடமாக இருந்தது. பாமியான் பல நாட்டுப் பயணிகள் தங்கிச் செல்லக்கூடிய பகுதியாக இருந்தது. இங்கு கிரேக்கம் மற்றும் புத்த கலை அம்சங்கள் ஒரு தனிப்பட்ட பாரம்பரிய பாணியில், ஒருங்கிணைந்து அக்கலை கிரேக்க-புத்த கலை என்று அறியப்பட்டது.
இந்த மாகாணத்தில் பல புகழ்மிக்க வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கதாக உள்ளவை; புகழ்வாய்ந்த பாமியன் புத்தர் சிலைகள் அதைச் சுற்றி உள்ள 3,000 குகைகள், பேண்ட்-இ அமீர் தேசிய பூங்கா, தாரா-இ-அஜ்ஹடார், கோல்கோடா மற்றும் ஜாகாக் ஆகிய பண்டைய நகரங்கள், பெரோஸ் பஹார், அஸ்டோபா, கிளிகான், கஹோர்கின், காஃரின் மற்றும் சில்டுகட்டரன் போன்ற இடங்கள் ஆகும்.